கொரோனா தோற்று உறுதியான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்து மற்றொரு மத்திய அமைச்சருக்கு எதிரொலி!!!

0
71

 

மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதியான நிலையில் அமித் ஷாவை சந்தித்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ புக்கு மருத்துவ அறிவுரையின்படி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ ட்விட்டர்  செய்ததுதாவது:  மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் முன்பு மாலையில் நான் சந்தித்தேன். தற்பொழுது அவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்  அவரை சந்தித்த எனக்கும் பாதிப்பு இருக்கும் என்று டாக்டர் அறிவுறுத்துகிறார்.

அதன் காரணமாக எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அடுத்த சில நாட்களுக்கு விலகி  இருக்கப் போகிறேன். அதன்பின் கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்களால் அறிவுறுத்த பட்டிருக்கிறேன்.

ஏனென்றால் விதிகள் மற்றும் அனைத்து நெறிமுறைகளின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனா தாக்கத்திலிருந்து நம்மை சுற்றியுள்ளவர்களை மீட்டெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

author avatar
Parthipan K