கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது இப்படித்தான்! அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்த பரபரப்பு தகவல்!

0
202

சென்னை வியாசர்பாடி சார்ந்த பிரியா என்ற 17 வயது மாணவி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் அவர் சென்னை ராணி மேரி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் அங்கு கால்பந்து விளையாட்டுக்கு பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது கால் வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு முட்டியில் ஜவ்வில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அறுவை சிகிச்சை முடிவடைந்த பின்னும் அவருக்கு காலில் வலி இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் முட்டிக்கு மேல் வரையில் கால் அழுகும் நிலையில் இருப்பதால் காலை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக கால்கள் அகற்றப்பட்டது இருந்தாலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் திடீரென்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி வைத்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது வலது கால் மூட்டு ஜவ்வு பிரச்சனையின் காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏழாம் தேதி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

மாணவிக்கு ஆர்த்தோஸ்கோபி சிகிச்சையை அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்திருக்கிறார்கள் இருந்தாலும் மருத்துவரின் கவனக்குறைவு காரணத்த போடப்பட்ட காட்டு காரணமாக ரத்த ஓட்டம் தடைப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்ந்து வலி உள்ளிட்ட காரணத்தால் 8 தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 மூத்த மருத்துவ நிபுணர்கள் மாணவிக்கு சிகிச்சை வழங்கி வந்தனர்.

நள்ளிரவுக்கு மேல் சிறுநீரக பாதிப்பு, ஈரல் பாதிப்பு, இதய பாதிப்பு என்று தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று காலை 7:15 மணியளவில் மாணவி பிரியா உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல தவறான சிகிச்சை வழங்கிய 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மீது திரை ரீதியா நான் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

பிரியாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு, உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். பிரியாவின் சகோதரர்கள் மூவரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்தரவாதம் வழங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.