கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி!

0
63
Husband who murdered and pretended! Catch the police!
Husband who murdered and pretended! Catch the police!

கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்! போலீசார் கிடுக்கிபிடி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் தேவேந்திரா. இவரின் மனைவி தீப்தி சோனி (28). இவரை வங்கிக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது கணவர் பலோடா அழைத்து சென்று உள்ளார். அதன் பின்  வீடு திரும்பும் போது கிசோரா என்ற கிராமத்தில் காரை நிறுத்தியுள்ளார். இரவு நேரம் என்பதால், தான் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, மனைவியை காரிலேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், தான் திரும்பி வந்து பார்க்கும் போது மனைவி பிணமாக இருந்ததாக கூறி உள்ளார். போலீசார் தீப்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் தன் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளை யடித்து சென்றதாகவும் கூறி உள்ளார்.

ஆனாலும் போலீசார் கணவனை திரும்பவும் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி போலீசார் கூறுகையில் கணவரே மனைவியை கொலை செய்ய ஆட்களை ஏவி கொலை செய்ததாக கூறுகின்றார்.

இவரை கணவன் தேவேந்திரன், பிரதீப் சோனி மற்றும் அவரது மனைவி இணைந்து கொலை செய்ததாகவும், அதற்காக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளனர். மேலும் இந்த கொலைக்காக அந்த கணவர் வீட்டு வேலை ஆட்களுக்கு ஒன்றரை இலட்சம் கொடுத்துள்ளார். ஆனால் மூவரும் எங்களிடம் கொள்ளை கும்பல் செய்ததாக கூறுகின்றனர்.

தீப்தி உல்லாச வாழ்க்கைக்காக பல பேருடன் தொடர்பில் இருந்ததாகவும் கணவன் கூறுகிறார். எனவே அவரை கொலை செய்யும் எண்ணத்தில் தான் வங்கிக்கு அழைத்து சென்றது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். வீட்டு வேலை ஆட்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் பதுங்கி உள்ளனர்.

கணவனும், மற்றொரு பெண்ணும் மனைவியை பிடித்துக் கொள்ள பிரதீப் ஒரு கையிற்றை கொண்டு கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்கள். இந்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக தன் பெற்றோருடன் பேசவில்லை. மேலும் இந்த ஜோடிக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளதும் குரிப்பிடத்தக்கது.

பல ஆண்களுடன் தொடர்பு என்கிறாரே தவிர யாருடைய பெயரையும் தெரிவிக்காததால் மேலும் இது பற்றி விசாரித்து வருகிறோம் என்றும் போலீசார் கூறினார்கள்.