என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தரேன்! ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது குழந்தைக்கு நடந்தேறிய கொடுமை!

0
94
I bought chocolate if you come with me! Cruelty to a five year old child for saying the word desire!
I bought chocolate if you come with me! Cruelty to a five year old child for saying the word desire!

என்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கி தரேன்! ஆசை வார்த்தை கூறி ஐந்து வயது குழந்தைக்கு நடந்தேறிய கொடுமை!

சிவமொக்கா மாவட்டத்தில் பத்ராவதி தாலுகா ஹரதொளலு கிராமத்தில் 5 வயது குழந்தை குடும்பத்துடன் வசித்து வருகிறாள். அவளது பெற்றோர்கள் இருவரும் கூலித் தொழிலாளிகள். சம்பவத்தன்றும் சிறுமியின் பெற்றோர், எப்பொழுதும் போல் வேலைக்கு கிளம்பி விட்டனர். வீட்டில் சிறுமி மட்டுமே தனியாக இருக்கிறாள். அதை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த என்ற 20 வயது நபர் ஒருவர் சிறுமியின் வீட்டுக்கு சென்று அந்தக் குழந்தையிடம் என்னுடன் வந்தால் சாக்லெட் வாங்கி கொடுப்பதாக கூறி தனது தோட்டத்தில் உள்ள குடோனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அழைத்துச் சென்று அந்த நபர் குழந்தையிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என்றும், மீறி கூறும் பட்சத்தில் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான். ஆனால் சிறுமியோ பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் தனக்கு நடந்த விசயங்களை கூறி அழுதுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், அந்த வினய் மீது ஒலேஒன்னூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினையை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அந்த வினய் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்துள்ளார் என்றும், அதுவும் இதே போல் பாலியல் குற்றம் தான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர் மீது தற்போது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.