இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!!

0
33
#image_title

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்!!! பிரபல நடிகை கட்டன்ரைட்டாக அறிவிப்பு!!!

பிரபல தெலுங்கு நடிகை ஒருவர் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவது கிடையாது என்று கண்டிப்பாகவும் கட்டன்ரைட்டாகவும் கூறி இருக்கிறார்.

தமிழில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிபாதி. அதன் பிறகு நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் நடித்தார். பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மாயவன் என்ற திரைப்படத்தில் நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் நடித்தார்.

மாயவன் திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்த நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் தற்பொழுது 6 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தணல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை லாவண்யா திரிபாதி அவர்களுக்கும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி அவர்களின் சகோதரர் நாகபாபு அவர்களின் மகனும் பிரபல நடிகரும் ஆன வருண் தேஜ் அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. கூடிய விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நடிகர்.சிரஞ்சீவி அவர்களின் வீட்டு மருமகள் ஆகப் போகிறார் என்ற காரணத்தில் நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவது இல்லை என்று இயக்குநர்களிடம் தெரிவித்து உள்ளார்.

தற்பொழுது வரை ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களில் கவர்ச்சியான காட்சிகள் இருக்கும் திரைப்படங்களையும் அறைகுறை ஆடையுடன் நடிக்கவிருந்த திரைப்படங்களையும் நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் தமிழில் வெப் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் நடிகை லாவண்யா திரிபாதி அவர்கள் தமிழில் நடிக்கவிருந்த வெப் தொடரில் நடிக்கவும் மறுத்துவிட்டார். அதற்கு காரணம் ஒன்றே தான். அந்த வெப் தொடரில் நடிகை லாவண்யா திரிபாதி நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்திற்கு கவர்ச்சியான காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் வடிவமைக்கப்பட்டது என்ற காரணத்தினால் தான்.

இன்னும் சில நாட்களில் திருமணம் முடிந்து நடிகர் சிரஞ்சீவி அவர்களின் வீட்டு மருமகள் ஆகப் போவதன் காரணமாக இனிமேல் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை லாவண்யா திரிபாதி அவர்ஙள் எடுத்த முடிவை நடிகர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர்.