வாலி கோபமாக இருந்தால் அவரது வீடு தேடி போய் சமாதானப்படுத்தும் இந்த நடிகர்

0
146
#image_title

கவிஞர் வாலி அவர்களை சொல்ல வேண்டுமா அவருக்கு அறிமுகமே தேவையில்லை. தனது எளிமையான பாடல்களின் மூலம் மனதிற்கு மக்களுக்கு ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவர் என்றே சொல்லலாம்.

 

ஆனால் இவர் மிகவும் கோபக்காரர் திமிர் பிடித்தவர் என்று பலரும் சொல்லுவார்கள்.ஆனால் திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்கத்தானே செய்யும் என்றும் பலர் கூறியுள்ளனர்.

 

மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டார் படார் என்று அவரிடம் கேள்வி கேட்டு விடுவார். இதுதான் இவருடைய இயல்பு.

 

அப்படி இவரது கவிதைகளில் மயங்கி எம்ஜிஆர்ே அடுத்த எனது எல்லா படத்திற்கும் இவர்தான் பாடல்களை எழுதுவார் என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த ஒரு கவிஞராகவும் அவர் விளங்கி இருந்தார். சிவாஜி எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் அஜித் மட்டுமல்ல இன்றைய தலைமுறையாக இருக்கும் தனுஷ் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு கூட கவிஞர் வாலி பாடல் எழுதியுள்ளார்.

 

புரியும் வகையில் தமிழ் நடையில் மக்களுக்கு எழுதவும் தெரியும், மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதவும் அவருக்கு தெரியும்.

 

வாலி முதல் முதலாக விஸ்வநாதன் ராமமூர்த்தி இயக்கத்தில் முதல் முதலில் அவர் எழுதிய பாடல் இதயத்தில் நீ இந்த படத்தில் ஜெமினி கணேசன் அவர்கள் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் அவ்வளவு பெரிதாக ஓடவில்லை. பாடல்கள் நன்றாக இருப்பினும் அவர் பேசப்படவில்லை என்று ஜெமினிகணேசன் வாலியிடம் சொல்லி மிகவும் வருத்தப்பட்டாராம்.

 

மேலும் ஜெமினி கணேசனிடம் வாலியை பற்றி கேட்கும் பொழுது அவர் ஒரு கோபக்கார என்று சொல்லியிருக்கிறார் . அதற்கு வாலி “ஆம் அவர் சொன்னது போல் நான் கோபக்காரர்தான்” . சில நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு சில நண்பர்கள் மட்டும் இருப்பார்கள். அதில் முக்கியமானவர் ஜெமினிகணேசன். நேரடியாக வீட்டிற்கு வந்து என்னை சமாதானப்படுத்துவார் என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் என்றால் அது ஜெமினிகணேசன் நல்ல உயர்ந்த நண்பர் உயர்ந்த மனிதர் என்றும் அவர் சொல்லியுள்ளார்.

author avatar
Kowsalya