உடலில் உள்ள கொழுப்பு கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

0
288
#image_title

உடலில் உள்ள கொழுப்பு கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

உடலில் கொழுப்புகள் அதிகம் சேரும் பொழுது அவை கொழுப்பு கட்டிகளாக மாறத் தொடங்கும்.இந்த கொழுப்பு கட்டி உடல் பருமன் இருப்பவர்கள்,உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என்று அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாகும்.இந்த கொழுப்பு கட்டிகளால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் கரைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*கொடிவேலி தைலம் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் கொடிவேலி தைலம் தேவையான அளவு ஊற்றிக் கொள்ளவும்.கொடிவேலி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியவை.

பின்னர் அதை உடலில் கொழுப்பு கட்டி இருக்கும் இடங்களில் தடவவும்.இந்த தைலத்தை இரவு நேரங்களில் உபயோகித்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:-

கற்றாழை எடுத்து அதன் தோலை சீவி அதில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு சிறிய உரல் எடுத்து அதில் கற்றாழை ஜெல்,கிராம்பு 10,அரைத்த மஞ்சள் கிழங்கு தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு இடித்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி அதனுடன் கடுகு எண்ணெய் அல்லது விளக்கு எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்.

பின்னர் அந்த பேஸ்டை உடலில் கொழுப்பு கட்டி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து அதன் மீது பஞ்சு வைத்து,காட்டன் துணி ஒன்றை சுத்தி விடவும்.இந்த ரெமிடியை இரவில் பயன்படுத்த வேண்டும்.இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் 7 நாட்களில் கொழுப்புக் கட்டிக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மேலும் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கல் உப்பு 2 முதல் 3 தேக்கரண்டி போட்டு வறுத்து அதனை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை போல் கட்டி கொள்ள வேண்டும்.பின்னர் அதனை கொழுப்பு கட்டி மேல் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை இவ்வாறு செய்தால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும்.இதற்கு மற்றொரு தீர்வு சாத்துக்குடி ஜூஸ்.அடிக்கடி சாத்துக்குடி ஜூஸ் பருகி வந்தால் கொழுப்பு கட்டிகள் கரைந்து விடும்.