மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு… 

0
73

 

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு…

 

மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

மியான்மர் நாட்டில் கச்சிண் மாகாணம் உள்ளது. அந்த கச்சிண் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியை சுரங்க தொழிலாளர்கள் செய்து வந்தனர். அப்பொழுது அந்த சருங்கத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.

 

சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

இதையடுத்து மியான்மர் நாட்டில் கச்சிண் மாகாணத்தில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன மற்ற தொழிலாளர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நிலச்சரிவு ஏற்பட்ட கச்சிண் மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கச்சிண் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.