மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி… தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!

0
53

 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி… தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா…

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று(ஆகஸ்ட்1) நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

 

இந்நிலையில் இரண்டு அணிகளும் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இதனால் மூன்று ஒருநாள் போட்டிகள் கெண்ட தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

 

இந்நிலையில் இன்று அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும் நிலையில் இரண்டு அணிகளுமே வெற்றி பெறும் நோக்கத்துடன் விளையாடவுள்ளது.

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகின்றது. இரண்டாவது போட்டியில் ஓய்வு அறிவிக்கப்பட்ட ரோஹித் மற்றும் கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட அணிக்கு திரும்புவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

 

இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணியும், தோல்வி அடைந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணியும் களம் இறங்குகின்றது. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.