Thursday, September 19, 2024
Home Blog Page 4905

திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்: ரஜினிகாந்த்

0

திருவள்ளுவருக்கும் தனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த முயற்சியில் திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்

இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் கூறியபோது, ‘திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியிருக்கும் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. திருவள்ளுவர் ஒரு சித்தர், ஞானி. சித்தர், ஞானிகள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்

அதே நேரத்தில் திருவள்லுவர் ஒரு ஆத்திகர், கடவுள் நம்பிக்கை உடையவர். நாத்திகர் இல்லை. மேலும் நாட்டில் எவ்வளவோ மக்களுடைய பிரச்சினை இருக்கும் போது திருவள்ளுவர் விவகாரத்தை பெரிதாகத் தேவையில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

மேலும் பொன் ராதாகிருஷ்ணன் அடிக்கடி என்னை வந்து சந்திப்பதால் தான் பாஜகவில் இணையவிருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தி வருகின்றனர். திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயற்சிப்பது போல் எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடந்து கொண்டிக்கின்றது அதில் திருவள்ளூர் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

முன்னதாக கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்ற கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கே.பாலசந்தருடனான தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் கமல்ஹாசனுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை

0

ஆதிதிராவிடர் கட்டடம் இருந்தது உண்மைதான் திமுக ஜெயராஜ்! நிலைகுலைந்து போன உடன்பிறப்புகள் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடை

அசுரன் படத்தை பார்த்துவிட்டு சும்மா இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘முரசொலி’ என்ற தலைவலி வந்திருக்காது,. ட்விட்டரில் அவர் பதிவிட்ட ஒரே ஒரு ட்விட் இன்று தமிழக அரசியல் களத்தில் கலகலக்க வைத்துள்ளது,. முரசொலி இடம் பஞ்சமி நிலத்திற்கு தான் சொந்தமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தகுந்த சமயத்தில் கூறியதால்,. இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் ஒரு பட்டாவை காட்டி இது பாத்தியப்பட்ட தனிநபருக்கு சொந்தமான பட்டா எனவும் வெளியிட்டிருந்தார்,. இதற்கு பதிலளித்த ராமதாஸ் மூலப்பத்திரம் எங்கே? அவை யாரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது என்று அடுக்கடுக்கான கேள்விகளை டிவிட்டர் மூலமாகவே முன்வைத்தார்,. தகுந்த நேரத்தில் நான் முரசொலி பத்திரத்தை வெளியிடுவேன், உண்மை நிலை அன்று தெரியும் என்றும், அதுவே முரசொலி விவரத்தில் பஞ்சமி நிலம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பதிலாக அமையும் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்,.

இந்நிலையில் பாஜகவும் தன் பங்குக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் புகார் அளித்து மத்திய அரசு மூலமாக ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது,. இதனை எதிர்கொள்ள முடியாமல் திமுக தரப்பு திகைத்து கொண்டிருக்கிறது,.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் தமிழக தலைமை செயலருக்கு இடத்தை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளது,. மேலும் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் முரசொலி விவகாரத்தில் பஞ்சமி நிலம் என்று தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்,. இது திமுகவினரை கதிகலங்கச் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று தினத்தந்தியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் முரசொலி நிலம் தொடர்பாக விவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது,. இதில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்,. திமுக தரப்பில் பேச்சாளர் சிவ.ஜெயராஜ் அவர்கள் கலந்து கொண்டனர், காரசாரமாக நடைபெற்ற இந்த விவாதத்தில் திருட்டுப் பொருள் எத்தனை கை மாறினாலும் திருட்டுப் பொருள் திருட்டுப்பொருள் தான் என்று நீதிபதி சந்துரு பேசியதை சுட்டிக்காட்டி செ.கு.தமிழரசன் பேசினார்,. இதற்கு பதிலளிக்க முடியாமல் திமுகவின் சிவ.ஜெயராஜ் அவர்கள் முரசொலி இடத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி கட்டடம் இருந்தது உண்மைதான் என்று யாரும் எதிர்பாராதவிதமாக பேசினார்,. இது திமுகவினரை கதிகலங்க செய்துள்ளது,.

மேலும் திமுக தலைமைக்கு தர்மசங்கடமான நிலையை உருவாக்கி உள்ளது,. இதன் காரணமாக திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தினத்தந்தி விவாத நிகழ்ச்சியில் திமுகவினர் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது,. ஆதிதிராவிடர் நல கட்டிடம் முரசொலி அலுவலகம் கட்டப்படுவதற்கு முன்பு இருந்தது என்று திமுகவின் முக்கிய பிரமுகரே தெரிவித்துள்ளதால் அக்கட்சி நிலைகுலைந்து போயுள்ளது.

அசுரன் படம் அதன் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகருக்கு புகழை சேர்த்ததோ இல்லையோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடாமல் செய்துவிட்டது என்று எவராலும் மறுக்க முடியாது,.

பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?

0

பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசிற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது.

அதே நேரத்தில் தங்களிடம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து திமுக படு தோல்வியை அடைந்தது அந்த கட்சியின் செயல்பாடு சரியில்லை என்றும்,மக்கள் மத்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் ரசிக்கபட வில்லை என்ற கருத்தும் வந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் முடிவில் அவருக்கு எதிராகவே அமைந்து விடுகிறது.சமீபத்தில் நடந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி வேட்டி உடுத்திய விவகாரம் முதல் இதற்கு முன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியது வரை அனைத்தும் அவருக்கு எதிராகவே அமைந்துள்ளது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தை பார்த்து விட்டு ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பஞ்சமி நிலம் குறித்த கருத்துக்கு பாமக நிறுவனர் எழுப்பிய கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் தேடி கொண்டிருக்கின்றனர்.

அசுரன் படம் குறித்து திமுக தலைவர் டிவிட்டரில் பதிவிட்ட கருத்து:

அந்த பதிவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முதலில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை முதலில் திருப்பி தாருங்கள் என விமர்சனம் செய்ய அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் பட்டாவை வெளியிட்டு பதில் அளித்திருந்தார்.

மருத்துவர் ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட்டர் பதிவை விமர்சனம் செய்தது:

இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல அது தனியாருக்கு சொந்தமான இடம் என பதிலை டிவிட்டரில் அந்த நிலத்திற்கு சொந்தமான பட்டாவை இணைத்து பதிவிட்டிருந்தார்.

கடந்த காலங்களில் குறிப்பிட்ட ஆண்டுகள் ஓரிடத்தில் வசிப்பவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய நிலையில் அதை ஆதாரமாக ஏற்று கொள்ளாமல் மூலப் பத்திரத்தை வெளியிடுமாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சார்பில் கேட்கப்பட்டது.

ஆனால் பஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது மூலப் பத்திரத்தை வெளியிடாமல் மூலப் பத்திரத்தை காட்டினால் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் என இருவரும் பதவி விலகுவார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மருத்துவர் ராமதாஸ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே நடந்து வந்த இந்த டிவிட்டர் விவாதத்தில் சம்பந்தமில்லாமல் அன்புமணி ராமதாஸ் அவர்களை பதவி விலக கேட்டதே அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஸ்டாலின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அடுத்து மூலப் பத்திரத்தை வெளியிட கேள்வி கேட்டவர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பாளர்களா? என்ற மலுப்பல் கேள்வி ஸ்டாலின் மீதான சந்தேகத்தை அதிகப் படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி பல முக்கிய செய்திகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையிலும் பாமக பஞ்சமி நிலம் குறித்த விமர்சனத்தை விடாமல் மீண்டும் அக்கட்சியின் தலைவர் G.K மணி மூலம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. நடந்து முடிந்த பல முக்கியமான நிகழ்வுகளால் இதை மறந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த திமுக தலைமைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இனி அனைத்து அரசியல் கட்சிகளும் திமுக தலைவர் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் மூலப் பத்திரத்தை வெளியிட கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.உண்மையிலேயே அந்த இடத்திற்கு மூலப் பத்திரம் என ஒன்று இருந்தால் அதை வெளியிட்டு விட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய குற்ற சாட்டு பொய் என்று நிரூபிக்க திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்கலாமே என்றும் கேள்விகள் வந்த வண்ணமே உள்ளன.

இப்படி ஒரு பக்தி தேவையா? வைரலாகும் வீடியோ

0

அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவர உள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தீர்ப்பை அடுத்து எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்
அயோத்தி பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் வேறு பகுதிக்கு தற்காலிகமாக குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

https://twitter.com/ExSecular/status/1192405745062440961

இந்த நிலையில் ஒரு தீவிர ராமர் பக்தர் சுமார் 20 அடி நீளத்தில் ஒரு காவி கொடியை கையில் ஏந்தி, பிஸியான சாலையின் நடுவில் நின்று இங்கும் அங்கும் கொடியை ஆட்டிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

இதனால் அந்த பகுதியில் இரு பக்கமும் செல்லவேண்டிய வாகனங்கள் தடைபட்டு நின்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் அந்த ராமர் பக்தருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொது மக்களை தொந்தரவு செய்யும் அளவுக்கு பக்தி முற்றிப் போய் இருப்பது பக்தியையே கேலி செய்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக ஸ்டாலினுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறிய நன்றி!

0

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் திமுக தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

எமர்ஜென்சி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டது வேறொரு வழக்கில் என்றும், சமீபத்தில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் கூறினார். இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஊடகம் ஆதாரத்துடன் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த ஊடகத்திற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காத திமுகவினர், நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டம் செய்தனர். அவரது வீட்டின் முன்னால் நூற்றுக்கணக்கான திமுகவினர் குவிந்து அமைச்சரின் உருவ பொம்மைக்கு பாடை கட்டி எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டு அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிர்த்திட தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் முக ஸ்டாலினின் இந்த வேண்டுகோளுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ஸ்டாலின் பற்றி நான் பேசியதில் சில தவறான புரிதல்கள் ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முதல்வரிடம் விளக்கம் அளித்துள்ளதாகவும், தனக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் எனக் கூறிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

0

கழிவறைக்கு பூஜை செய்த பொதுமக்கள்: அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து காவி நிறத்தை பிரபலப்படுத்தி, நாடு முழுவதும் பரப்பி வருவதை அக்கட்சி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் காவி மயம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் உள்பட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஒரே காவி மயமாக இருப்பதால் அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் கூட சமீபத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரம் பெரும் பிரச்சனையாகி தற்போதும் அது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில அரசின் சார்பில் கட்டப்பட்ட கழிவறை ஒன்றுக்கும் காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இன்னும் திறக்கப்படாத இந்த கழிவறை, காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் ஒருவேளை இது கோயிலாக இருக்கும் என்று நினைத்து அந்த வழியாக போவோர் வருவோர் வணங்கி செல்வதாகவும் ஒரு சிலர் பூட்டப்பட்ட அந்த கழிவறைக்க்கு வெளியே சூடம் பத்தி வைத்து பூஜை செய்வதாகவும் செய்திகள் வெளிவந்தன

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக காவி நிறத்தை மாற்றி பிங்க் நிறத்தில் பெயின்ட் அடித்ததோடு, கழிவறை என்ற போர்டும் வைக்கப்பட்டது. அதன்பின்னரே பொதுமக்களுக்கு அது பொது கழிப்பறை என்பதும் இவ்வளவு நாள் ஒரு கழிப்பறைக்கா பூஜை செய்தோம் என்றும் தெரிய வந்தது

காவி நிறம் என்பது புனிதமான நிறமாக இருந்ததாலும் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் மட்டுமே அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்பதே இந்த சம்பவத்தில் இருந்து உபி அரசுக்கு கிடைத்திருக்கும் பாடம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது

கற்புக்கரசி கஸ்தூரிக்கு துணி வேணுமா? கலாய்த்த நெட்டிசன்

0

சமூக வலைத்தளங்களில் கஸ்தூரி அவ்வபோது சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவு செய்வதும் அதற்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுப்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வுகள். அந்த வகையில் இன்று கஸ்தூரி இன்று சர் சிவி ராமன் அவர்களின் பிறந்த நாள் என்றும் அவருக்கு வாழ்த்து கூறலாம் என்றும் போட்ட ஒரு பதிவுக்கு டுவிட்டர் பயனாளி ஒருவர் ‘முதலில் ஒழுங்கா துணி போடு’ அப்புறம் வாழ்த்து சொல்லலாம் என்று கூற அதற்கு கஸ்தூரி எனக்கு நீயே கொஞ்சம் துணி வாங்கிக்கொடேன்’ என்று பதிலடி கொடுத்தார்.

அந்த டுவிட்டர் பயனாளியும் விடாமல், ‘கற்புக்கரசி துணி கேட்கிறார்’ இதில் எந்த துணியை வாங்கி கொடுப்பது’ என்று கஸ்தூரியின் பழைய கவர்ச்சி உடை புகைப்படங்களை பதிவு செய்தார்.

டுவிட்டர் பயனாளியின் இந்த கருத்தை அடுத்து கஸ்தூரிக்கு டுவிட்டரில் ஆதரவு குவிந்தது. கஸ்தூரியை தரம் தாழ்ந்து பலவித மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்த அந்த டுவிட்டர் பயனாளிக்கு கண்டனம் குவிந்து வருகிறது

சர்.சி.வி. ராமன் குறித்து கஸ்தூரி தொடங்கிய டுவிட் கடைசி ஆபாசமாக முடிவடைந்தது குறித்து அனைவருக்கும் வருத்தமே

https://twitter.com/aiswaryavenkat/status/1192363879025610753

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

0

இந்திய அணிக்கு வங்கதேசம் கொடுத்த இலக்கு எவ்வளவு தெரியுமா?

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி அபாரமாக வென்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மேற்கு வங்க தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதி தொடர் வெற்றியை பெற்று வந்த இந்திய அணி வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது

இந்நிலையில் இன்று ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது

ஸ்கோர் விபரம்: வங்கதேசம் – 153/6 20 ஓவர்கள்

முகமது நயீம்: 36 ரன்கள்
சவும்யா சர்க்கார்: 30 ரன்கள்
மஹ்முதுல்லா: 30 ரன்கள்
லிட்டன் தாஸ்: 29 ரன்கள்

முதல் டி20 போட்டியில் அபாரமாக விளையாடிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் முசாஃபீர் ரஹிம் இன்று 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்

இந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த இலக்கு இந்திய பேட்ஸ்மேன்களை பொருத்தவரை எளிதான இலக்கு என்றாலும் இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் சுதாரிப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நாளை நீதிமன்றம் செல்லவுள்ளோம்: நடிகர் சங்க நிர்வாகிகள் பேட்டி

0

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்து தயாரிப்பாளர் சங்கத்தை முடக்கிய தமிழக அரசு, தற்போது நடிகர் சங்கத்துக்கும் தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்துள்ளது. தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதா என்ற பெண் அதிகாரியின் கட்டுப்பாட்டில் தான் இனி நடிகர் சங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள் கூறிய போது ’தனி அதிகாரிக்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, மேலும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பையும் அனைத்தையும் செய்து கொடுப்போம். இந்த பிரச்சினை தொடர்பாக நாங்கள் முதலமைச்சரையும் செய்தித் துறை அமைச்சரையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். நாங்கள் சட்டரீதியாகவும் ஜனநாயகத்துடன் தேர்தலை எதிர்கொண்டோம். இனிமேலும் சட்ட ரீதியாகத்தான் செயல்படுவோம் என்று கூறினார்

இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பூச்சிமுருகன் பதில் கூறிய போது ’சிறப்பு அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். நான்கு பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3000 பேர் உறுப்பினராக கொண்ட சங்கத்திற்கு ஒரு தனி அதிகாரியை நியமித்து உள்ளது சரியான நடவடிக்கை அல்ல. ராதாரவி காலத்தில் சங்கத்தில் பல குளறுபடிகள் இருந்தபோது இந்த நடவடிக்கையை ஏன் அப்போதைய அரசு செய்யவில்லை’என்று கேள்வி எழுப்பினார்

மேலும் நடிகர் சங்கம் கடந்த சில மாதங்களாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் சென்று கொண்டிருந்தது என்றும், எனவே சங்கம் செயல்படவில்லை என்று கூறுவது தவறு என்றும் கூறினார்.

விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

0

விரைவாக தொப்பையை குறைக்க எளிதான வழி

பலருக்கும் பிரச்சனையாக இருக்கும் உடலில் வயிற்றை சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், அவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை அல்லது உணவு முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. ஆனால் நமக்கு நாமே தான் உடல் பிரச்சினையை கொடுக்கும் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக நாகரிகம் என்ற பெயரில் தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பெரும்பாலோனோர் இந்த வாழ்க்கை முறை ஆரோக்கியமற்றது என்று தெரிந்திருந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிய பிறகு உடலில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், அந்த பிரச்சினையால் அவஸ்தைப்படுவோர் அதிகம். இத்தகைய பிரச்சினைகளில் ஒன்று தான் உடலில் ஏற்படும் தொப்பை. ஆனால் இத்தகைய பிரச்சினையான தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது என்பது பலருக்கும் தெரியாது.

இதற்கு முதலில் அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை செய்வது தான். இதனால் உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையையும் எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் நாம் செய்யும் உடற்பயிற்சி ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் உதவுவதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அந்த பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பையும் குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒரு சில உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலானோர் வாழ்வில் பெரும் தொல்லையாக இருக்கும் தற்போது வேகமாக பரவி வரும் பிரச்சினையான தொப்பை உருவாக நம்முடைய செயல்களே காரணமாக அமைந்துள்ளது. அதாவது இதற்கு காரணம் நாம் வேலை செய்யும் முறை. உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் இருப்பது. இரவில் அதிக நேரம் மொபைல் போன் உபயோகப்படுத்தி கொண்டு இருப்பது. காலையில் நேரம் கழித்து எழுவது போன்றவையே.

இதனையெல்லாம் கட்டுப்படுத்தி காலையில் நேரத்துடன் எழுந்து இதற்கான உடற்பயிற்சியான தனுராசனம் செய்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து தொப்பை உடலிலிருந்து காணாமல் போய்விடும்.

தனுராசனம் செய்ய குப்புற படுத்துக் கொண்டு, கைகளை பக்கவாட்டில் தொடை ஒட்டியவாறு வைத்துக் கொள்ள வேண்டும்.