தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை! தொழில் நிறுவனங்கள் மகிழ்ச்சி!

0
68

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக, சிறு மற்றும் குறு அதோடு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய சங்கத்தின் பிரதிநிதிகள் காலாவதியாக இருக்கின்ற உரிமங்களை அரசு நீட்டித்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அவர்களுடைய இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் சென்ற மே மாதம் முதல் வருகிற செப்டம்பர் மாதம் வரையில் காலாவதியாக இருக்கின்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, அதோடு தொழிலாளர் பாதுகாப்பு துறை உரிமம், போன்ற எல்லா சட்டபூர்வமான உரிமம் உள்ளிட்டவணைகளுக்கு டிசம்பர் மாதம் வரையில் நீட்டிப்பு வழங்கி இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளிடம் வாங்கிய வணிகப் உரிமங்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையில் செல்லும் என்று தெரிவித்து இருக்கிறது அரசு.

இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டிருக்கின்றது. அந்த உத்தரவை உற்பத்தி வணிகம் சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு தடையில்லா சான்று ஒப்புதல் வாங்கவும், உரிமம் போன்றவற்றை புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதன்படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் காலாவதியாக இருக்கின்ற அனைத்து சட்டபூர்வமான உரிமைகள் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.