கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!!

0
29
#image_title

கோல்ப் காரில் இருந்து விழுந்த மேக்ஸ்வெல்! காயம் காரணமாக முக்கியமான போட்டியில் இருந்து விலகல்!!

குஜராத்தில் கோல்ப் காரில் சென்று கொண்டிருந்த பொழுது ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் விலகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆரம்பத்தில் தொடர்ந்து சில தோல்விகளை சந்தித்தாலும் தற்பொழுது தோல்வியில் இருந்து மீண்டு தொடர்ந்து வெற்றிப் பாதையில் ஆஸ்திரேலிய அணி பயணித்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் சேம்பியனான ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தன்னுடைய 7வது லீக் சுற்றில் இங்கிலாந்து அணியுடன் நவம்பர் 4ம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்து வருகின்றது. இந்நிலையில் காயம் காரணமாக மேக்ஸ்வெல் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது குஜராத் மைதானத்தில் கோல்ப் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்யவுன்டர் கிளென் மேக்ஸ்வெல் கீழே தவறி விழுந்தார். இதில் மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் கிளென் மோக்ஸ்வெல் விளையாட மாட்டார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அரையிறுதிப் போட்டிகள் நெருங்கும் நிலையில் இங்கிலாந்து அணியுடனான பேட்டியில் மேக்ஸ்வெல் விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை தந்துள்ளது. அதே போல காயம் அடைந்த மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக அணியில் யார் சேர்க்கப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.