மழை வெள்ள பாதிப்பு! சென்னை புறநகர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

0
72

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 15 தினங்களாக தொடர்ந்து விட்டு,விட்டு பலத்த மழை பெய்து வருகின்றது இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதீத நல்ல பாதிப்புகள் ஏற்பட்டது.

இந்த மழைநீர் பாதிப்பு முடிவடைவதற்குள் அடுத்தடுத்து கடந்த 2 தினங்களாக மீண்டும் கனமழை பெய்தது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மீண்டும் அதிகம் உண்டாகி இருக்கிறது.

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த தியாகராய நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும், மீண்டும், நேரில் சென்று பார்வையிட்டு அங்கே மழை நீரை வடிய வைக்க துரிதகதியில் நடவடிக்கை எடுத்தார்.

அதேபோல நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற ஆவடி, பூந்தமல்லி, திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை விரைவு படுத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின். தாம்பரம் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளில் அதிகமாக பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

இதற்காக இன்று காலை 9.30 மணி அளவில் வீட்டில் இருந்து கிளம்பிய முதலமைச்சர் நேராக தாம்பரம் அருகே இருக்கும் வரதராஜபுரம் சென்றார் அங்கு அதிகமாக மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பிடிசி குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டார்.

தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆய்வு செய்தார் முதலமைச்சர்.

அவருக்கு ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அமுதா உள்ளிட்டோர் அங்கு நடைபெற்று வரும் வெள்ள நிவாரண பணிகளை விளக்கி தெரிவித்தார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அருகில் இருக்கின்ற வேல்ஸ் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். என்பதை அறிந்து கொண்ட முதலமைச்சர் அங்கேயே நேரில் சென்று பொதுமக்களுக்கு போர்வை வேஷ்டி சேலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே நிறைய கதாபாத்திரங்கள் முடிச்சூர் சென்று அங்கே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் அங்கே இருக்கின்ற அமுதம் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி இருக்கின்றார்.

அதன்பிறகு அங்கு இருந்து தாம்பரம் இரும்புலியூர், பகுதிக்கு சென்ற முதலமைச்சர் அங்கேயே வாணியன் குளம் பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகளிடம் இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர் தாமோ.அன்பரசன், எஸ் ஆர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தார்கள் என சொல்லப்படுகிறது.