டெல்லி தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டோர் மருத்துவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம்!

0
202

டெல்லி தப்லீக் ஜமாஅத் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டோர் மருத்துவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம்!

சீனாவின் வூகான் நகரில் தொடங்கி பல நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல உயிர்களை கொத்துக்கொத்தாக கொன்று வருகிறது. இதனால் பாரத பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்னதாக டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாஅத்தில் மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை இஸ்லாமிய மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டில் 3400 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர், அதில் 250 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கிடையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 16ம் தேதி மாநாடு, கூட்டம் நடத்துவது மற்றும் மக்கள் பொது இடங்களில் கூட தடை விதித்தார். இதனால் அந்த ஜமாஅதில் இருந்து பலர் புறப்பட்டுள்ளனர், இதில் சிலர் அங்கேயே தொடர்ந்து தங்கியுள்ளனர்.

இதனையடுத்து மார்ச் 23 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது, இதனால் அங்கிருந்து அவர்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அந்த ஜமாஅத்தில் தங்கியிருந்த இந்த வேளையில் பல்வேறு ஊர்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 29ம் தேதி வெளிநாட்டில் இருந்து வந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனே ஜமாஅதில் இருந்த அனைவரையும் வெளியேற்றி சீல் வைக்கப்பட்டது, மேலும் அங்கிருந்தவர்களை பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் 31ம் தேதி இரவு 5 பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்ட 167 பேரை தனிமைப்படுத்தி பாதுகாப்பில் வைத்துள்ளது மத்திய அரசு. மறுநாள் காலை அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை உண்ண மறுத்து தங்கள் விருப்பமான உணவுகளை கேட்டு ரகளை செய்துள்ளனர்.

மேலும் தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக பாதுகாப்பு மையத்தில் வெளியில் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களை உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது எச்சிலை உமிழ்ந்து அட்டகாசம் செய்துள்ளனர்.

இந்த இஸ்லாமியர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவதால் மருத்துவர்கள் அந்த மையத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Previous article8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!
Next articleதனது ஊரை காக்க எல்லையில் அமர்ந்த எல்லைச்சாமி..!! கொரோனா பாதுகாப்பில் வியக்கவைத்த இளம்பெண்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here