உங்களுடைய சேவைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! நெகிழ்ந்து பாராட்டிய முதலமைச்சர்!

0
66

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் ஈடுபட்டவர்களின் சேவைக்கு தலை வணங்குகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, தொடர் கனமழை, அளவுக்கு அதிகமான நீர் வரத்து, உள்ளிட்டவை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுடைய துயர்துடைக்க பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் மின் துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள், என்று நிவாரணப் பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய எல்லோருடைய சேவைக்கும் தலை வணங்குகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

தன்னலமற்ற உங்களுடைய சேவையின் காரணத்தாலும், தியாகத்தாலும், கோடிக்கணக்கான பொது மக்களின் துயர் துடைக்க படுகின்றது, இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப எல்லோரும் ஒன்றாக இணைந்து உழைத்திடுவோம், பொதுமக்களை காப்போம், உங்களுடைய தியாகம் விலைமதிப்பில்லாதது, உங்களுடைய சேவை மகத்தானது, உங்களுடைய உழைப்பிற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.