“நான் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்க மாட்டேன்…” ராகுல் காந்தி அதிரடி

0
73

“நான் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல.. மன்னிப்பு கேட்க மாட்டேன்…” ராகுல் காந்தி அதிரடி

ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான ஒரு பொது கூட்டத்தில் பேசும் போது ” மோடி, மேக் இன் இந்தியா’வை உருவாக்குவதாக சொன்னார். ஆனால் தற்போது ரேப் இன் இந்தியா தான் உருவாகிக் கொண்டிருக்கிறது ” என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு பா.ஜ.க  பலவகையிலும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்தது. அதோடு பாராளுமன்றத்திலும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில் இன்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற  பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ” என் பெயர் ராகுல் காந்தி.. ராகுல் சாவர்க்கர் அல்ல. உண்மையை பேசியதற்காக நான் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் மட்டும் அல்ல எந்த காங்கிரஸ் காரரும் கேட்க மாட்டார் . நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா தான் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்ததற்காக இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.”என்று தெரிவித்தார்.

author avatar
Parthipan K