இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் … Read more

வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் லெட்டர் பேட் மூலம் தகவல் ஒன்று பரவி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் கையொப்பமிட்ட அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பெறுநர் : மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை 600009. அன்புடையீர், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காந்திபுரம், எண் 24ல் வசிக்கும் திருவாளர் எஸ் சாந்தி என்பவருக்கு, TN34 AJ 4567 என்ற ஃபேன்சி எண்ணை வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.!! பொதுமக்கள் ஷாக்.!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.!! பொதுமக்கள் ஷாக்.!!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்ற நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் வீடுகளில் … Read more

உள்ளாட்சி தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்.!! வாக்களர்கள் ஆர்வம்.!!

உள்ளாட்சி தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்.!! வாக்களர்கள் ஆர்வம்.!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை வரை நடைபெற உள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த … Read more

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை -சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை -சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!!

தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, … Read more

ராஜஸ்தான் அணியை புரட்டிப்போட்ட மும்பை அணி அபார வெற்றி.!!

ராஜஸ்தான் அணியை புரட்டிப்போட்ட மும்பை அணி அபார வெற்றி.!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா … Read more

தமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் நாளை கோவிலைத் திறக்க பாஜக போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நாளை அனைத்து நாட்களிலும் திருக்கோயில்களை திறக்கக்கோரி போராட்டம் நடைபெற உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது,” தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்கப் பட்டிருக்கும் நிலையில் கோவில்களை மட்டும் அவர்கள் எதற்காக மூடி வைக்க வேண்டும் தமிழக அரசானது வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருக்கோயில்களை மூடுவதற்கு ஆணையிட்டுள்ளது. மேலும், கோவில்களில் ஏற்படும் கூட்டத்தை வாரத்தின் … Read more

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.! யாருக்கு அதிஷ்டம்.!!

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வெற்றி.! யாருக்கு அதிஷ்டம்.!!

இன்றைய (06-10-2021) ராசி பலன்கள் மேஷம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாள். ரிஷபம் சம வயதினரின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் … Read more

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி நாளை பதவி பதவியேற்பு

மேற்கு வங்கம்: மம்தா பானர்ஜி நாளை பதவி பதவியேற்பு

பபானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த ஜாகிர் உசேன் மற்றும் அமிருல் இஸ்லாம் ஆகியோருக்கு நாளை அக்டோபர் 7,2021 அன்று மதியம் 2 மணிக்கு மேற்கு வங்க சட்டசபையின் வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதாக அம்மாநிலத்தின் ஆளுநர் ஜக்தீப் தங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மற்றும் இரண்டு திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களின் இடைத்தேர்தல் வெற்றி கடந்த திங்கள் அக்டோபர் 3, அன்று வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வ … Read more

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!! டாஸ் வென்ற மும்பை பௌலிங் தேர்வு.!!

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் மும்பை vs ராஜஸ்தான் அணிகள்.!! டாஸ் வென்ற மும்பை பௌலிங் தேர்வு.!!

இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங் தேர்வு. நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 51வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் … Read more