27-8-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

27-8-2021 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையில் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. நோய் தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான … Read more

காலியாகிறதா அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி? அடுத்த தலைவர் இவர்தானாம்!

காலியாகிறதா அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி? அடுத்த தலைவர் இவர்தானாம்!

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றவுடன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஒரு தகவல் வெளிய வந்தது. அதாவது அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ தான் அது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கே டி ராகவன் குறித்த ஆபாச வீடியோ ஒன்றினை மதன் ரவிச்சந்திரன் தன்னுடைய … Read more

திருமணத்தில் ஏற்படவிருக்கும் திருப்புமுனை! அதிமுகவை தக்க வைப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

திருமணத்தில் ஏற்படவிருக்கும் திருப்புமுனை! அதிமுகவை தக்க வைப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?

தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமணம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற இருக்கின்றது. அந்த திருமணத்திற்கு அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிமுக நிர்வாகிகள் இடையே தொலைபேசி மூலமாக உரையாற்றி அந்த ஆடியோவை தொடர்ச்சியாக வெளியிட்டு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் சசிகலா. இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக சசிகலாவுடன் உரையாற்றிய நபர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் … Read more

நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருந்திருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்!

நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருந்தால் இன்று அம்மா உணவகம் இருந்திருக்காது! முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்!

தமிழக சட்டசபையில் இன்று விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைக்கழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்தது விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக செயல்படும் என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்தி வருவதாகவும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது என்று தெரிவித்தார். இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அடுக்கடுக்கான … Read more

சட்டசபையில் ஏற்பட்ட பரபரப்பான விவாதம்! எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு!

சட்டசபையில் ஏற்பட்ட பரபரப்பான விவாதம்! எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு!

ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது குற்றச்சாட்டு வைத்தார். அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரத்தில் இருக்கின்ற ஜெயலலிதாவின் பல்கலைகழக விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு செய்திருக்கிறது. விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படுமா என்றும் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியை வைத்து கொண்டு இப்படி செய்து வருவதாக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கேள்வி எழுப்பியிருக்கிறார். தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் ஜெயலலிதாவின் பெயரில் செயல்படாது … Read more

அதிமுகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான நத்தம் விஸ்வநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். அதோடு நத்தம் சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராகவும், இருக்கிறார். தற்சமயம் அவர் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று வயிற்று வலி உண்டானது உடனடியாக அவர் கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருடைய உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்கள். அவர் நல்ல நிலையில், இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நத்தம் … Read more

தமிழக சட்ட சபையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்!

தமிழக சட்ட சபையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெயரை கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக தமிழக சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். இன்றைய தினம் தமிழக சட்டசபையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மசோதா … Read more

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தீவிரமாகி வருகின்றது இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான முழு விவரங்கள் அறிந்து கொண்ட சசிகலா இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் நிலையில் ஆட்சி மாறிய சூழ் நிலையில், அந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி … Read more

ராகவன் வீடியோ விவகாரம்! அண்ணாமலையின் முகத்திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன்!

ராகவன் வீடியோ விவகாரம்! அண்ணாமலையின் முகத்திரையை கிழித்த மதன் ரவிச்சந்திரன்!

தமிழக அரசியல் களத்தில் தற்சமயம் பிஜேபியின் கேடி ராகவன் தொடர்பான வீடியோ தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்களும்,நிர்வாகிகளும், அந்த கட்சியில் இருக்கும் பெண் நிர்வாகிகளுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக தற்போதைய மத்திய இணை அமைச்சர் முருகன் தலைவராக இருந்த சமயத்திலேயே குற்றச்சாட்டுகள் இருந்தது. தற்சமயம் ராகவன் வீடியோ கால் விவகாரத்தில் இது உறுதியாகியிருக்கிறது கேடி ராகவன் பெண் நிர்வாகி ஒருவருடன் மிகவும் ஆபாசமாக பேசுவது போலவும் அவருடன் பேசிக்கொண்டு … Read more

திராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!

திராவிட இயக்கங்களுக்கு துக்ளக் குருமூர்த்தி வைத்த சூடு! கொதித்தெழுந்த முரசொலி நாளிதழ்!

முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற 15 ஆம் தேதி நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் கொடி ஏற்றிய பின்னர் ஆற்றிய சுதந்திர தின உரையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக 150 ஆண்டுகளுக்கு முன்பே போராடியது தமிழகம் தான் எனவும், தமிழகத்தின் இந்த பங்களிப்பை முழுமையாக நாம் தொகுத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பாராட்டி துக்ளக் நாளிதழ் எழுதி இருக்கிறது. ஆனால் இது பாராட்டு அல்ல விஷமம் … Read more