இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Bus strike

இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்! 14வது ஊதிய ஒப்பந்தம், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவறையற்ற வேலை நிறுத்தத்தை ஊழியர்கள் நேற்று தொடங்கினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொமுச, சிஐடியு உட்பட 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை … Read more

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை!

John geddert

பாலியல் புகாருக்கு உள்ளான சில மணி நேரத்தில் முன்னாள் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் தற்கொலை! அமெரிக்காவின் மிச்சிகன் மாகானத்தில் உள்ள லான்சிங் நகரில் டிவிஸ்டர்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப் என்ற பயிற்சி நிலையத்தை வைத்திருந்தவர் ஜான் கெடர்ட். இவர், அமெரிக்காவின் பெண்கள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 63 வயதான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கெடர்ட் மீது அடுக்கடுக்கான பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை அளித்தவர், அவரது பயிற்சி … Read more

சீமான் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்தது ஏன்?

Naam Tamizhar katchi state executives, are stepping down from Seeman! The party breaks down?

சீமான் சகாயம் ஐஏஎஸ் அவர்களை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்தது ஏன்? வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியாக கமலுடைய கட்சியான மக்கள் நீதி மையம் கலந்து கொள்ள போகிறது. அதே போல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தேர்தலில் சந்திப்பார் என்று எதிர்பார்க்க பட்டது ஆனால் தனது உடல்நிலை குறைவால் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் மிகவும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான திரு சகாயம் அவர்கள் கட்சி ஆரம்பிக்க போவதாக … Read more

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு…

Electronics shop Fire in Madurai

மதுரையில் எலெக்ட்ரானிக்ஸ் கடையில் தீ விபத்து! கொளுந்து விட்டு எரிவதால் பரபரப்பு… மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் செல்லும் டவுன் ஹால் பிரதான சாலையில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அடுத்தடுத்து இரண்டு கடைகளுக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வெளியேறி அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் … Read more

மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு

Vaccination

மார்ச் 1 முதல் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் இலவசம் இல்லை – நடுவண் அரசு அறிவிப்பு நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து மருத்துவப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்ததால் இரண்டாவது டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 60 வயதிற்கு … Read more

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

சசிகலாவை சந்தித்த முக்கிய புள்ளி! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று இன்றைய தினம் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்த நிலையில், திடீரென்று சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவும் சந்தித்திருக்கிறார்கள். சென்னை டி நகர் வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ … Read more

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்! அரசிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் திமுக!

சத்துணவு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். சத்துணவு அமைப்பாளர் சமையல் உதவியாளர் போன்ற எல்லோரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அங்கீகரித்து ஊதியம் வழங்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்றையதினம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அவர்களை காவல்துறையினர் கைது செய்தார்கள். நாகர்கோவிலில் … Read more

கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

கடுப்பைக் கிளப்பிய முக்கிய கட்சி! கடுப்பில் அதிமுக!

சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 25 சீட்டுகள் வரை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தச்சநல்லூர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜகவின் மாநில தலைவர் முருகன் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு இலக்க எண்ணிக்கையில் சட்டசபைக்கு போவார்கள் என்று தெரிவித்தார். அதேபோல திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நயினார் நாகேந்திரன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவார் எனவும், … Read more

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!

இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் விருப்பத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இன்று முதல் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரையில் அனுதினமும் மாலை 5 மணி வரையில் விருப்ப மனுக்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் போட்டியிட ரூபாய் 15,000 செலுத்தி … Read more

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

தமிழகத்தை கடனாளி ஆக்கிய கட்சி! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்குமார் பொருளாதார அரசியல் பற்றி எதுவுமே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு குழந்தை போல பேசி வருகிறார் என்றும், அவர்களுடைய ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அதுபோல திமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட தொலைக்காட்சி தற்சமயம் தமிழகத்தில் இயங்கிக் கொண்டு இருந்தால் அந்த வீட்டின் … Read more