இங்கிலாந்தில் தாக்கம் ஏற்படுத்தும் நோரா வைரஸ்! கவலை தெரிவித்த அரசு!

0
87
Nora virus affecting UK! Concerned government!
Nora virus affecting UK! Concerned government!

இங்கிலாந்தில் தாக்கம் ஏற்படுத்தும் நோரா வைரஸ்! கவலை தெரிவித்த அரசு!

இங்கிலாந்தில் தற்போது பெரும்பாலான நகரங்களில் நோரா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது எனவும் இங்கிலாந்து பொது சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் குரங்கு வைரஸ் தாக்கி கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நோரா வைரஸ் என்ற புதிய பரவலான தீவிர நோய் பரவல் என இங்கிலாந்து பொது சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கிய நேரத்தில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருவதால் இங்கிலாந்து பொது சுகாதார மையம் ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஐந்து வாரங்களில் குறைந்தது 154 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.நோரா வைரஸ் பொதுவாக Winter Vomiting Bug என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி எடுப்பது, மயக்கமாக இருப்பது, உடல் வலி, தலைவலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது. இந்த வைரஸ் எல்லா வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்து உள்ளது.

இந்த வைரஸ் சுத்தமில்லாத உணவு சாப்பிடுவது, மற்றும் தூய்மையற்ற தண்ணீர் குடிப்பது, கிருமிகள் உள்ள குளிர்பானங்களை குடிப்பதன் மூலமும் இது பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நோய் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமும் வைரஸ் பரவுகிறது என்றும் தெரிவித்துள்ளது. வைரஸின் பொதுவான அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி ஆகியவை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது வயிறு அல்லது குடலின் வீக்கத்தை ஏற்படுத்தும் குடல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வைரஸ்காக குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. இது ஒரு நபரை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாதிக்கும் இதன் விளைவாக கொரோனாப்போலவே சரியான சுகாதாரத்தை பராமரிப்பதே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரே வழி என்றும், மேலும் ஆரோக்கியமான நடைமுறையில் கழிப்பறையை சுத்தமாக வைத்துக் கொள்வது, ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவது, சாப்பிடுவதற்கு முன் முன் உணவு உண்பதற்கு முன் கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது, மற்றும்  பழங்களையும் காய்களையும் அதிக அளவு எடுத்துக்கொள்வது மற்றும் அவற்றை நன்கு கழுவிய பின் 96 சாப்பிடுவது போன்றவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்.

சானிடைசர்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. நீர் இழப்பைத் தடுக்க உதவும் ஏராளமான திரவங்களை குடிக்கவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த தொற்று நோய் பொதுவாக ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை உடலில் நீடிக்கும். இத்தகைய அறிகுறிகள் உள்ள எவரும் நோய் குறையும் வரை வீட்டில் தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அடிப்படை மருத்துவ தேவைகளை  கொண்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டால் மருத்துவ கணிப்பு தேவைப் படலாம் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.