மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரபலம்! பரபரப்பான அரசியல் களம்!

0
71

தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.அப்போது சென்னை அமைந்தகரை யில் இருக்கின்ற எம்ஜிஎம் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு குடலிறக்கப் பிரச்சனை இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார்கள்.

ஆனாலும் சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற இயலாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் அதே எம்ஜிஎம் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டு அங்கேயே அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார்.

அதன் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை அவர் மருத்துவமனையில் இருந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அவருடைய வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில், துனை முதல்வர் ஒ.பி.எஸ் சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிகிறது. ஆகவே இது வழக்கமான மருத்துவபரிசோதனைதான் என சொல்லப்படுகிறது.