பாகிஸ்தான் விவகாரம் கம்பீர் கடும் தாக்கு?

0
154

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்திருந்தார்.அவரின் சாதனைக்கு கூட தக்க அங்கீகாரம் தர மறுக்கப்பட்டது என்று புதிய சர்ச்சை கிளப்பினார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும் பாஜகவின் எம்பியுமான கம்பிர் தமது ஆழ்ந்த கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இதுதான் பாகிஸ்தானில் உண்மையான முகம் ஒரு விளையாட்டு வீரர் பிரதமராக இருந்த போதிலும் அந்த நாட்டில் இவ்வாறு நடக்கிறது பாருங்கள்.

நமது அணியை பாருங்கள் முகமது அசாருதீன் சிறுபான்மையினராக இருந்த போதும் இந்திய அணியின் கேப்டனாக நீண்டகாலம் செயல்பட்டால் முகமது கைப், இர்பான் பதான், முனாஃப் படேல் மிகவும் மரியாதையுடன் நடத்தப் பட்டனர் இதில் முனாஃப் படேல் எனக்கு நெருக்கமான நண்பர் நாங்கள் ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தோம் ஆனால்

பாகிஸ்தானில் இருந்து வரும் இந்த தகவல் உண்மையிலேயே துரதிஷ்டம் அந்த அணிக்காக அந்த அணியில் சிறந்த முறையில் விளையாண்ட வீரரை நடத்திய விதம் மிகவும் வெட்கக்கேடானது என தன் கண்டனத்தை தெரிவித்தார்.

Previous articleஇந்திய அணியின் அடுத்த ஆண்டு சுற்று பயண விவரம்?
Next articleதமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here