பாட்டி வைத்தியம் “மலசிக்கல்” பாதிப்பு 1 மணி நேரத்தில் தீர இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

0
36
#image_title

பாட்டி வைத்தியம் “மலசிக்கல்” பாதிப்பு 1 மணி நேரத்தில் தீர இந்த முறையை பாலோ பண்ணுங்க!!

இன்றைய கால ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் பெரும்பாலானோர் மலசிக்கல் பாதிப்பை சந்தித்து வருகிறோம்.மனிதர்கள் தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாறி நம்மை பாடாய் படுத்தி விடும்.

மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகளை பாலோ செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

*விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

*தண்ணீர் – 1 கிளாஸ்

*எலுமிச்சை பழச்சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 2 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும்.அதில் 1 தேக்கரண்டி சுத்தமான விளக்கு எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

பின்னர் அவற்றை குடிக்கவும்.இவ்வாறு செய்தால் அடுத்த 20 நிமிடங்களில் மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

மற்றொரு தீர்வு:-

முந்தின நாள் இரவு ஒரு பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,1 தேக்கரண்டி சோம்பு(பெருஞ்சீரகம்) மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து ஊற வைக்கவும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற வைத்துள்ள கொத்தமல்லி விதை + பெருஞ்சீரகம் + சீரகம் தண்ணீரை சேர்க்கவும்.

அதன் பின் 1 துண்டு கற்கண்டு சேர்த்து அதை மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து ஒரு டம்ளர் எடுத்து தயார் செய்து வைத்துள்ள பானத்தை வடிகட்டி கொள்ளவும்.இதில் விளக்கெண்ணெய் 1/2 தேக்கரண்டி ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இதை பருகினால் அடுத்த 2 மணி நேரத்தில் உடலில் அடைபட்டு கிடந்த மொத்த மலமும் வெளியேறி விடும்.