மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

0
124
#image_title

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மக்களுக்கு அறிவுரை.

இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து குடிநீர் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே குடிநீர் தயாரிப்பு ஆலையை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி குடிநீர் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

சேலம் மாவட்டத்தில் பாட்டில் அடைத்து வைக்கப்படும் 47 குடிநீர் நிறுவனங்கள் உள்ளது.அதன் உரிமையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நடத்தப்பட்டது.உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் இயங்கியதா? என்று குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஒரு நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும், குடிநீர் பாட்டிலில் தண்ணீர் எவ்வாறு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தயாரிப்பு நிறுவனத்திடம் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் உரிமைத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து எச்சரிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்களிடமிருந்து குடிநீர் பாட்டிலில் தயாரிப்புத் தேதி குறிப்பிடப்படுவதில்லை, கேன்களில் அசுத்தம் இருப்பது, ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டு விட்டு மற்றொரு நிறுவனத்தில் தண்ணீர் நிரப்புவது, பழைய தண்ணீர் கேன்கள் பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் வந்து கொண்டுள்ளது.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக தண்ணீர் பாட்டில்களில் கிருமிகள் இல்லாமல் தான் இருக்கும், கிருமிகள் இருக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

தண்ணீர் வாங்கும் போது உணவு பாதுகாப்பு உரிமம் இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும், பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் பிஎஸ் எண்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவைகள் மக்கள் பார்த்து வாங்கவேண்டும் இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.