சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

0
233

சென்னையில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது

சென்னையில் பெட்ரோல் டீசலின் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 8 காசுகள் உயர்ந்து உள்ளது மற்றும் டீசலின் விலை 5 காசுகள் உயர்ந்து உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையில் உயர்வுக்கு ஏற்ப இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. பெட்ரோல் டீசலின் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 74.73 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. டீசலின் விலை ஒரு லிட்டர் ரூ 68. 27 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் சென்னையில் பெட்ரோலின் விலை நேற்றைய விலையை விட 8 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 74.81 ஆகவும், டீசலின் விலை நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ 68.32 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் ஆனது இன்று காலை முதல் அமலுக்கு வந்தது .

Previous articleஸ்டாலினின் முதல்வர் கனவை உடைத்த திருமாவளவன்? ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று சூளுரை..!!
Next articleஅமரேந்திர பாகுபலியாக மாறிய டொனால்ட் டிரம்ப்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here