பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்பட அந்த கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்!

0
67

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள் அதோடு 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆரம்பமானது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.

அதேபோல வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக் கொண்டார்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சட்டசபை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து ஐந்து சட்டசபை தொகுதிகளை கைப்பற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களும் தங்களுடைய பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி கே மணி தர்மபுரி சட்டசபை தொகுதியில் உறுப்பினர் வெங்கடேஸ்வரன் சேலம் மேற்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினர் அருள் சேலம் மேட்டூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினர் சதாசிவம் மற்றும் சட்டசபை தொகுதியில் உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்டோர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.