அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு!

பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்

அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அது தொடார்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். … Read more

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு. அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு … Read more

கட்சி பணத்தை வைத்து ஆடாத ஆட்டம்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

கட்சி பணத்தை வைத்து ‘ஆடாத ஆட்டம்’. எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ. 2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் ரூ. 253 கோடியாக நிதி இருப்பை உயர்த்திக் காட்டினேன்.  அந்த கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத … Read more

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

ஓபிஎஸ் மாநாடு! கத்தியுடன் வந்தவர் கைது!

ஓபிஎஸ் மாநாடு கத்தியுடன் வந்தவர் கைது

ஓபிஎஸ் மாநாடு !கத்தியுடன் வந்தவர் கைது! அதிமுகவில் பல குளறுபடி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை இன்று நடத்தினார். இந்நிலையில் மாநாடு  நடந்து கொண்டிருந்த போது மாநாட்டில் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி வந்துள்ளார். உடனே அவரை போலீசார் பிடித்து மேடைக்கு பின்புறம் அழைத்துச் சென்றனர்.இதனால் மாநாட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்ற நபரை மடக்கி பிடித்து கைது … Read more

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு. இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை! மீண்டும் பாஜக ஆட்சி. கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார். 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சியை பிடிப்பதற்கு … Read more

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு. அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் … Read more

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு 

கடும் எதிர்ப்பு 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தம்! முதல்வர் அறிவிப்பு. தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக நேற்று முன்தினம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனை தொடர்ந்து வேலை நேரத்தை அதிகரிக்கும் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு … Read more

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன். அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது … Read more