பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததை பற்றி பிரதீப் கூறிய உண்மை!

0
89
#image_title

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை அடித்ததை பற்றி பிரதீப் கூறிய உண்மை!

பிக்பாஸ் நகிழச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் பிரதீப் ஆண்டனி தற்பொழுது மூன்றாவது சீசனில் ஒரு கெஸ்டாக வந்த பொழுது அப்பொழுது மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட கவினை அறைந்தார். அது ஏன் எதற்கு அறைந்தார் என்பது பற்றி தற்பொழுது பிரதீப் கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் நடிகர் பிரதீப் ஆண்டனி அவர்களும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டியில் மற்ற போட்டியாளர்களை விட வித்தியாசமாக நடிகர் பிரதீப் அவர்கள் யுக்திகளை பயன்படுத்தி விளையாடி வருகின்றார். அந்த வகையில் நடிகர் பிரதீப் தற்பொழுது மூன்றாவது சீசன் நிகழ்ச்சியிலேயே நடிகர் கவினுக்காக பயன்படுத்தியுள்ளார். அந்த வகையில் பிரதீப் ஆண்டனி அவர்கள் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள விசித்ரா அவர்களிடம் நடிகர் கவினை அடித்தது ஏன் என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ப்ரீஸ் ரிலீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருந்த பொழுது நடிகர் கவின் பார்க்க நடிகர் பிரதீப் உள்ளே வந்தார். உள்ளே வந்தவுடன் நடிகர் பிரதீப் ப்ரீஸ் மோடில் உட்கார்ந்திருந்த கவினை பார்த்து பேசி பின்னர் பலர் என்று அறை விட்டார். இந்த சம்பவம் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்பொழுது பிரதீப் ஏன் அவ்வாறு செய்தார் என்பதை கூறியுள்ளார்.

இது குறித்து விசித்ரா அவர்களிடம் பிரதீப் “நடிகர் கவினை அடித்தது கூட ஒரு யுக்தி தான். ஏனென்றால் அந்த சமயப் கவின் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வந்தது. நான் கவினை அடித்தால் கவிதை பற்றி யாரும் பேசமாட்டார்கள். என்ன பற்றி நெகட்டிவாக பேசுவார்கள். கவிதை பற்றி பேசுவதை விட்டுவிடுவார்கள். அவனை காப்பற்ற நான் அப்படி செய்தேன்” என்று கூறினார்.

அப்பவே நடிகர் பிரதீப் சிறப்பான யுக்தியை கையாண்டுள்ளார். தற்பொழுது பிக்பாஸ் கேமை நன்கு புரிந்து கொண்டு உள்ளே வந்து பல யுக்திகளை பயன்படுத்தி பிரதீப் விளையாடி வருகிறார். பல யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து இப்படியே விளையாடி வந்தால் பிக்பாஸ் 7 டைட்டிலை வென்று விடுவார்.