ரஜினிகாந்தை சீண்டிய உதயநிதி?

0
72

நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட்டரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார். அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும், தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டுவிட்டரில் தனது எதிர் கருத்தை தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்?
குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது! என சீமான் தனது ட்வீட்டில் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் @ mkstalin அவர்கள் தலைமையில் 23 நடக்கும் CAA 2019 எதிர்ப்புப் பேரணி அங்கு அனைவரும் பங்கெடுப்போம் என்றும். உரிமைக்கான போராட்டத்தை வன்முறை என்று அஞ்சும் வயதான வசதியான முதியோர்களை வீட்டிலேயே பாதுகாப்புடன் விட்டு வரவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை சீண்டி உள்ளார்.

author avatar
CineDesk