பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

0
204
#image_title

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரோட் ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் திரண்ட கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரோட் ஷோ திட்டம் மூலமாக மக்களை சந்தித்து வருகிறார். இதையடுத்து நேற்று(மார்ச்18) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழக மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ரோட் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2.5 கிலோ மீட்டர் தூரம் திறந்தவெளி வாகனத்தில் பயணித்து மக்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பயணித்த சாலையின் இரு புறங்களிலும் திரண்ட மக்கள் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து இன்று(மார்ச்19) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு கார் மூலம் பயணித்து சென்றார்.

அதன் பின்னர் திறந்தவெளி வாகனத்தில் ஏறிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சாலையின் இரு புறங்களிலும் திரண்ட மக்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கேரளா மக்கள் மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். கேரளா மாநிலத்தில் ஏப்ரல் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.