தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

0
97
Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!
Romantic couple attempting suicide! Video shared on the web! But fate has split!

தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி! இணையத்தில் பகிர்ந்த வீடியோ! ஆனால் விதி பிரித்து விட்டதே!

மீண்டும் ஒரு புன்னகை மன்னன் படத்தில் வந்த காதல் ஜோடி போல ஒரு காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் அருகே உடுமலையிலிருந்து ஒரு நாற்பது கிலோமீட்டர் உள்ளே சென்றால் மறையூர் என்னும் இடம் உள்ளது. இது கேரளாவின் பார்டர் என்று கூட சொல்லலாம். இங்கு சினிமா படபிடிப்புகள் கூட அதிமமாக நடைபெறும்.

அந்த அளவிற்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது திகழும். முடிந்தால் ஒரு முறை போய் பார்த்து விட்டு வாருங்கள். மறையூர் அருகே பெரும்பாவூரைச் சேர்ந்த நாதிர்ஷா மற்றும் மறையூர் நிகிலா தாமஸ் என்ற ஜோடி இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறது. இந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, ஒரு வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளனர்.

மறையூர் அருகே உள்ள பிரம்மன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் முழுவதும் இருந்த அந்த ஜோடி, ஒரு நாள் முழுவதும் சேர்ந்து இருந்து விட்டு அதன் பிறகு அங்கிருந்து குதித்து தற்கொலை, செய்து கொள்ளலாம் என்று அங்கு சென்று அதிக நேரம் செலவழித்து உள்ளனர். அதன்பின் இருவருமே கத்தியால் தங்களது கைகளை வெட்டிக் கொண்டுள்ளனர். ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் மயங்கி விழுந்து விட்டனர்.

அதில் சுருண்டு விழுந்து கீழே விழுந்து விட்டார்கள். மலை உச்சியில் இருந்ததன் காரணமாக நாதிர்ஷா உருண்டு கீழே விழுந்து இறந்துவிட்டார். நிகிலா தாமஸ் அங்கேயே மயங்கி விழுந்த நிலையில் இருந்தார். அவரை அங்கு சென்ற மீட்ட காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரை கோட்டையம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மலையடிவாரத்தில் நாதிர்ஷாவின் உடலையும் கைப்பற்றினர். இருவரும் பேஸ்புக் மூலம் ஒரு வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

அதில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளனர். மறையூர் காவல் அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். காதலர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விஷயம் நமக்கே என்னவோ போல் உள்ளது. மேலும் காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட விஷயம் அங்கு மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. என்ன இருந்தாலும் விதியும் அவர்களை பிரித்து விட்டதே. இறப்பில் கூட அவர்கள் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்பதை போல.