அவர் மட்டும் பாமிற்கு திரும்பி விட்டால் போதும் உலக கோப்பை வசப்படும்! முக்கிய வீரர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு!

0
65

இந்திய அணியில் ஒரு முக்கிய வீரர் மட்டும் சரியான பாமிற்கு திரும்பி விட்டால் உலக கோப்பையில் வெல்வதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரிம் கணித்து இருக்கின்றார்.டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. முதலில் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த உலக கோப்பை தொடர் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் மாற்றப்பட்டது.

இந்த தொடருக்காக தயாராகும் பணிகளில் பிசிசிஐ தற்சமயம் மிகத் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது. அதன்படி வீரர்களின் திறமையை தெரிந்து கொள்ள ஒரே சமயத்தில் இரண்டு இந்திய அணிகளை உருவாக்கி இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல வைத்திருக்கிறது. மூத்த வீரர்கள் இங்கிலாந்திலும் ஐபிஎல் போட்டியில் கலக்கிய இளம் வீரர்கள் இலங்கை சுற்றுப்பயணத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த இரண்டு தொடர்களை டி20 உலக கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வில் மிக முக்கிய பங்காற்ற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்றை சாபா கரிம் தெரிவித்திருக்கின்றார். அவர் தெரிவித்த கருத்து கணிப்பு வருமாறு ஹர்திக் பாண்டியா மட்டும் தன்னுடைய முழுமையான திறமையை வெளிப்படுத்தினால் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் உறுதியாகிவிடும் உலகக் கோப்பை தொடருக்கு மட்டை வீச்சு மற்றும் பந்து வீச்சு என்று இரண்டிலுமே பாண்டியா தன்னுடைய பாமிற்கு திரும்பி விட்டால் மிகவும் உறுதியான சூழல் உருவாகும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கார்த்திக் பாண்டியா அவர்களுக்கு இலங்கை தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றார். ஐபிஎல் தொடரின்போது சென்னை போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவர் மிகவும் சிரமப்பட்டார். இலங்கையும் அதே போன்ற தன்மை கொண்ட ஆடுகளத்தில் தான் கொண்டு இருக்கிறது ஆகவே ஒருவேளை இலங்கை தொடரில் சிறப்பாக செயல்பட்டுவிட்டால் இந்திய அணியில் மீண்டும் தன்னுடைய இடத்தை பிடித்து விடுவார் என்று தெரிவித்திருக்கின்றார்.

சென்ற 2019 ஆம் வருடம் காயத்தால் பாதிப்படைந்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் இருந்து பெரிய அளவில் விலகி இருந்தார். இவர் பந்துவீச இயலாது என்று தெரிவித்த காரணத்தால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆகவே இலங்கை தொடரை அவர் பயன்படுத்திக் கொண்டால் தான் டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவரால் பங்கேற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.