விவாகரத்திற்கு பிறகு சமந்தா கலந்து கொண்ட முதல் டிவி நிகழ்ச்சி

0
82
Samantharuthprabhu

சில தினங்களுக்கு முன் சமந்தா – நாக சைதன்யா தம்பதியினர் தங்களது நான்கு வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு இன்று திருமண நாள். இந்த திருமண நாளன்று சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவும் நாக சைதன்யாவும் முதன் முதலில் சேர்ந்து நடித்தனர்.

அதன் பிறகு பல படங்களில் சேர்ந்து நடித்த இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இருவரும் இந்து மற்றும் கிருஸ்துவ முறைப்படி திருமணம் செய்தனர்.

திருமணம் ஆன பின்பும் சமந்தாவிற்கு தென்னிந்திய சினிமாவில் மார்க்கெட் குறையவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கொண்டு தான் இருக்கிறார்.

பேமிலி மேன் வெப் சீரீஸிற்கு பிறகு சமந்தாவிற்கு பாலிவுட்டிலும் அதிகமான பட வாய்ப்புகள் அதிகமாக வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது விஜய்சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’, சாகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா விரைவில் தனது புதிய திட்டங்களையும், திரைப்படங்களை பற்றியும் அறிவிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது.

விவாகரத்து அறிவுப்புக்கு பிறகு சமந்தா இன்று பதிவிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவு மிகப்பெரிய வைரலாகி வருகிறது.

தற்போது சமந்தா ஜூனியர் என் டி ஆர் நடத்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

ஜூனியர் என் டி ஆர் நடத்தும் ‘எவரு மீலோ கோடீஸ்வரலு’ நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டுள்ளார். இதில் சமந்தா ஜூனியர் என் டி ஆர் கேட்ட கடினமான கேள்விகளுக்கு பதில் அளித்து 25 லட்சம் வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

author avatar
Parthipan K