சசிகலாவின் மூக்கை அறுத்த உயர்நீதிமன்றம்!

0
74

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் சசிகலா இல்லத்தில் கடந்த 2017ஆம் வருடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக தினகரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டார்கள், அதன்பிறகு பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தார்கள், இந்த சோதனையில் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுகள் மூலமாக பல இடங்களில் சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக தெரிவித்து கங்கா பவுண்டேஷன் தினகரன், ஸ்பெக்ட்ரம் மால், உரிமையாளர்கள் பாலாஜி பழைய மாமல்லபுரம் சாலையில் ஸ்கொயர் ஐடி பார்க் புதுச்சேரி போசன்ஸ்கி உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி வருமானவரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

இதனை எதிர்த்து தினகரன் பாலாஜி கங்கா பவுண்டேஷன் உட்பட 14 நபர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமன் விசாரணை செய்தார் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள இயலாது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்து வருவதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த இயலாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருமானவரித்துறையினர் தரப்பில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் இடைத்தரகர்கள் மூலமாக சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும் இந்த சந்திப்பு பணமதிப்பிழப்புக்கு முன்னர் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் மாலுகான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை வழங்குபவரின் பெயரில்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.