ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம்!

0
133
#image_title

ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்புடைய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் விவேகானந்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நோட்டீஸ் காரணமாக ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மகளிர் கழிப்பறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

முறையீட்டை பரிசீலித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மாவட்ட நீதிபதியிடம் பேசப்படும் என்று தெரிவித்தவுடன் இந்த மனுவை ஏப்ரல் 28 அல்லது 24-ஆம் தேதி விசாரணை எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தது.

author avatar
Savitha