நான்கு முதல்வர்களிடம் பணியாற்றிய முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு 

0
114

நான்கு முதல்வர்களிடம் பணியாற்றிய முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா புதன்கிழமை இன்று மதியம் 1 மணியளவி்ல காலமானார். அவருக்கு வயது 77 ஆகிறது.

மதுரை மாவட்டம், சேடபட்டியை சேர்ந்தவர் சேடப்பட்டி ரா.முத்தையா. இவர் 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பிறந்தவர். தனது கடைசி காலத்தில் திமுகவில் பணியாற்றி வந்தார். மேலும் இவருடைய மகன் மணிமாறன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகபதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.