சென்னையில் ஷாருக் கானின் ஜவான் பட ஷுட்டிங்… மும்பையில் இருந்து வந்த 400 கலைஞர்கள்!

0
114

சென்னையில் ஷாருக் கானின் ஜவான் பட ஷுட்டிங்… மும்பையில் இருந்து வந்த 400 கலைஞர்கள்!

ஷாருக் கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

வரிசையாக விஜய்க்கு தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த அட்லி, இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ‘ஜவான்’ படத்தில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில், சென்னையில் முகாமிட்டுள்ளது அட்லி படக்குழு. இந்த படத்தில் விஜய் ஒரு நாள் மட்டும் கௌரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் பிரம்மாண்டமான சிறை செட் ஒன்றை அமைத்து அட்லி படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை ஷுட் செய்து வருகிறதாம் படக்குழு. இந்த ஷூட்டிங்குக்காக மும்பையில் இருந்து சுமார் 400 கலைஞர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்களாம்.

இந்த படத்தில் ஷாருக் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஷாருக்கானின் மனைவியாக தீபிகாவும், இன்னொரு கதாபாத்திரத்தின் காதல் ஜோடியாக நயன்தாராவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜவான் ஜூன் 2023 இல் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் தவிர, ஷாருக் கான், தீபிகா மற்றும் ஜான் ஆபிரகாமுடன் இணைந்து பதான் மற்றும் டாப்ஸியுடன் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் டன்கி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.