சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய தகவல்

0
59

சிவகார்த்தியன் நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் ’இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்

இந்த திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டது என்பதும் தற்போது இந்த படம் புத்துயிர் பெற்று மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கும் இந்த படம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24ஏம் ஸ்டுடியோஸ் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

author avatar
CineDesk