நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!

நீட் தேர்வில் முதல் முறையாக முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை!

நீட் நுழைவுத் தேர்வில், ஒடிசாவை சேர்ந்த சோயிப் அஃப்டாப் என்ற மாணவர் 720-க்கு 720 அதாவது முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 3,842 தேர்வு மையங்களில் கடந்த செப். 13ம் தேதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 14 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதினர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கான விடைகளை தேசிய தேர்வு முகமை அமைப்பு … Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தனர். இதற்கிடையே ரேஷன் கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால், ரேஷன் கடைகள் … Read more

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டாரா..?

3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பணி புரிந்தவர் சவுமியா பாண்டே. இவர் சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே, கர்ப்பிணியாக இருந்த சவுமியா பாண்டேவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரசவ கால விடுப்பு எடுக்காமல், பெண் அதிகாரி சவுமியா பாண்டே தன் பணிகளை மேற்கொள்ள 3 வார கால கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். சவுமியா பாண்டே தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு … Read more

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!

இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்! கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் நாகூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்துள்ளார்.இந்தப் பெண்ணிற்கு அதர்ஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான ஒரே மாதத்திற்குள் இருவரும் நட்பாகி தொலைபேசியில் நெருக்குமாகினர்.பிறகு இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து,பின்பு அதர்ஷ் -யை சந்திக்க அப்பெண் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனஹள்ளிகு பேருந்தின் மூலம் சென்றுள்ளார். பின்பு தேவனஹள்ளிலிருந்து, அதர்ஷ்வுடன், அப்பெண் … Read more

இன்று என்ன நாள் தெரியுமா..??

இன்று என்ன நாள் தெரியுமா..??

“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்றார் ஔவையார். உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வறுமை மட்டும் மாறாமல் தொடர்கிறது. உலகில் உள்ள பல நாடுகளில் மக்கள் வறுமையினால்  வாடுகின்றனர். ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத் தரத்துக்கு கீழ் வாழும் மக்களைஏழ்மை நிலையில் அல்லது ஏழ்மை நிலை கோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்று சொல்லலாம். வறுமையின் காரணமாக பல மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து … Read more

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

எம்.பி.ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

ரவீந்திரநாத் குமார் என்பவர் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது தேனி தொகுதியில் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் ஆவார். அதுமட்டுமின்றி இவர் அதிமுக கட்சியை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகன்.  ரவீந்திரநாத் குமார் போட்டியிட்ட தேர்தலில், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால்  இந்த தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். தற்போது … Read more

என் சாவுக்கு 7 பேர் காரணம்! உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும்! புதுமாப்பிள்ளை எழுதி வைத்த கடிதம்!

என் சாவுக்கு 7 பேர் காரணம்! உண்மையான நீதி கிடைத்த பிறகே என் உடலை எரிக்க வேண்டும்! புதுமாப்பிள்ளை எழுதி வைத்த கடிதம்!

மனைவி மற்றும் மாமியாரின் தொல்லையால் வெளிநாட்டில் இருந்து வந்த புதுமாப்பிள்ளை வீட்டில் தூக்கு போட்டு கொண்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் . வயது 30 . இவருக்கும் ஜெயப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் முடிந்துள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த கோபிநாத் திருமணம் முடிந்த பிறகு சவுதி அரேபியா சென்று விட்டார். கோபிநாத் வெளிநாட்டிற்கு சென்ற பிறகு ஜெயப்ரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 13ம் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 4,389 பேருக்கு பாதிப்பு! அக். 16 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,389 பேருக்கு பாதிப்பு! அக். 16 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 4,389 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,79,191 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,529 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,245 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பணியை இன்று தொடங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

கே.பி.அன்பழகன் அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்! அறிவிப்பு என்ன தெரியுமா?

கே.பி.அன்பழகன் அறிவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்! அறிவிப்பு என்ன தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குமாறு கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா அவர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்  சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை” என்று அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த முடிவை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் நேரடியாக தெரிவிக்கும்படி மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். மேலும் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக, … Read more