தமிழகத்தில் அக். 05 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் அக். 05 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 62 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,572 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

முடிவை மாற்றிக்கொண்ட ஓ.பி.எஸ்! அடுத்த நடவடிக்கை என்ன?

கடந்த 28 ஆம் தேதி நடந்த அதிமுக கட்சி பொதுக் கூட்டத்தின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.அப்போது ஓபிஎஸ் சார்பில் குறைந்த அளவிலே குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அவர்கள் பெரியகுளத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றிருந்தார். அவரை அங்கு சென்று சந்தித்த அதிமுக கட்சி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். தற்போது அக்டோபர் 7 ஆம் தேதியன்று முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட … Read more

மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

மெரினா கடற்கரை! பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது: சென்னை மாநகராட்சி!

சென்னை மெரீனா கடற்கரையில் அக்‌. 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்த வழக்கு ஒன்றில், கடற்கரைகளில் … Read more

நீங்க கேன் தண்ணீர் வாங்குறீங்களா..?? கேன் தண்ணீர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

நீங்க கேன் தண்ணீர் வாங்குறீங்களா..?? கேன் தண்ணீர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!!

சென்னையில் விற்கப்படும் குடிநீரில் 45% சுகாதாரமற்றவை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பல இடங்களில் அடைக்கப்பட்ட குடிநீரை தான் மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் இதனை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நம்பி கேன்களிலும், பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். மக்கள் பயன்படுத்தும் இந்த குடிநீர் சுகாதாரமானதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் சென்னையில் இருக்கும் குடிநீர் தயாரிக்கும் யூனிட்டுகளிடம் இருந்து தண்ணீர் … Read more

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

ஜே.இ.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு !!

கொரோனா ஊரடங்கு காரணமாக நீட் , ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் நடக்கவிருந்த நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகள், ஊரடங்கு காரணமாக நடத்த இயலாமல் போனது .இதனை நடத்தும் முடிவில் மத்திய அரசும் தேர்வு முகாமையும் முடிவெடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்தது. அதில் நடந்த ஜே.இ.இ தேர்வு ,செப்டம்பர் 27-ஆம் தேதி இந்தியா முழுவதும் … Read more

சாதி மறுப்பு திருமணம்! காதலியை கரம் பிடித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.!!

சாதி மறுப்பு திருமணம்! காதலியை கரம் பிடித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.!!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை இன்று காலை திருமணம் செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பிரபு (வயது 34). இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவிற்கும் காதலி சௌந்தர்யாவிற்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more

சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு… அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னை புறநகர் மின்சார ரயிலில் அனுமதி மறுப்பு... அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவை அனைத்தும் முடக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் உள்ள அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இன்று முதல் புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளதாகவும் இந்த ரயிலில் … Read more

மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக “நம்பர் பிளேட்” பொருத்தினால் நடவடிக்கை..! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!!

மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக "நம்பர் பிளேட்" பொருத்தினால் நடவடிக்கை..! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை!!

வாகனங்களில், மோட்டார் வாகன விதிகளுக்கு மாறாக நம்பர் பிளேட் பொருத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் சமீப காலமாக வாகனங்களில் உள்ள நம்பா் பிளேட், மோட்டாா் வாகன சட்டத்தில் அரசு நிா்ணயித்துள்ள விதிமுறைகளின்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பின் புதிதாக வாகனப் பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு … Read more

ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழா !! 

கமுதி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த முதல்நாடு கிராமத்தில் நள்ளிரவில் காட்டுப்பகுதியில் எல்லை பிடாரி அம்மனாக கன்னிப்பெண்ணை பீடம் அமைத்து அம்மன் தெய்வத்திற்கு 60 ஆடுகள் பலியிட்டு ,பச்சரிசி சாதம் சமைத்து ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோதமான திருவிழாவிற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். முதல்கிராமத்தில் வசித்து வரும் மக்கள், தங்களது விளை நிலங்களை பயிரிட்ட விளைந்த நெல்லை, அரிசியாக்கி ஒவ்வொரு … Read more

தமிழகத்தில்  இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

தமிழகத்தில்  இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் … Read more