அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன். அவரது மனைவி தனலட்சுமியும், மகன் டில்லிராஜாவும் ஸ்ரீபெரும்புதூரில் 2000 சதுர அடி நிலத்தை வாங்கினர். 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக மூன்று பேருக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப் பிரிவில் … Read more

திமுக ஆட்சி அமைந்த பிறகு சமயபுரம் கோயில் டெபாசிட் தொகை குறைந்துள்ளதாக புகார் !

திமுக ஆட்சி அமைந்த பிறகு சமயபுரம் கோயில் டெபாசிட் தொகை குறைந்துள்ளதாக புகார் !

திமுக ஆட்சி அமைந்த பிறகு திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலின் வைப்பு நிதியளவு குறைந்துள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து,  திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 ஆண்டில் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் 422 கோடி குறைந்துள்ளதாகவும் , அந்த நிதியிலிருந்து இன்னோவா , ஸ்கார்பியோ என 2 கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்துக்கு , கோயில் இணை ஆணையர் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரமேஸ் என்கிற நபர் சமூக வலைதளங்களில் தொடர் குற்றச்சாட்டுகளை … Read more

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது – ஓ.பன்னீர் செல்வம்!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர் செல்வம்!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது, எந்தச் சூழலிலும், யாராலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். திருச்சி மாநாடு தமிழ்நாடு முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; அடுத்த கட்ட மண்டல மாநாடு குறித்தும் , மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளதாக என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை முன்னாள் முதலமைச்சர் … Read more

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

சேலம் கம்மாளப்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!! கிராம சபை கூட்டம் நிறுத்திவைப்பு!

கம்மாளப்பட்டி கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை மாற்றி அமைக்கும் முடிவினை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம். இதன் காரணமாக காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டதால் கடும் வாக்குவாதம். தமிழகம் முழுவதும் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 385 கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் கம்மாளப்பட்டி ஊராட்சியில் இன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கம்மாளப்பட்டி … Read more

தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!

தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!!

தமிழகத்தில் மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கியது. தற்போது மேலும் வெயிலின் அளவு உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இப்போதே பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. எப்போதும் மே மாதம் இன்னும் சற்று அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் தான் அக்னி நட்சத்திரம் வரும். கிட்டத்தட்ட 25 நாட்கள் தொடரும் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் அளவு மிக அதிகமாகவும், அனல் காற்றும் வீசும். இந்த அக்னி நட்சத்திர வெயிலானது மே 4 ஆம் … Read more

வெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

வெளுத்து வாங்கப்போகுது மழை! இந்த 4 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! தமிழகத்தில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் சில  மாவட்டங்களில் சாரல் மழை பெய்ந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பில், நாளை மறுதினம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் குறிப்பாக ராணிப்பேட்டை , வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய … Read more

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு!!

Due to high number of passengers, the fare of omni buses has suddenly increased!!

அதிக பயணிகள் வருகையால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் கழித்துவிட்டு பள்ளிகள் திறக்கும்போதுதான் சென்னைக்கு வருவார்கள். இதனால் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு மே மாதம் முழுவதும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் ஊருக்கு … Read more

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

Gas Price Reduced into 500

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் … Read more

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வழுக்கும் கண்டனம்

எழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம் தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி வரும் தமிழக அரசு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதற்கு மும்முரம் காட்டி வருகிறது. மேலும் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசிடம் 15 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை பெற்றுள்ளது தமிழக அரசு. மேலும் இதற்கு மீனவர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு மீனவ மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் … Read more

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!!

The bride who took her own life in one month! Four people, including the husband, were caught!

கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!! புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி – விஜயா தம்பதியினர். இவர்களின் மகன் அரவிந்தன் என்பவராவார். அரவிந்தனுக்கும் நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. தற்போது நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். நாகேஸ்வரியின் பெற்றோர் திருமணத்தின்போதே அவருக்கு 15 சவரன் நகைகள் போட்டு … Read more