கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை!

0
44
Sudden death of a young person who was vaccinated against corona! Family request to find the cause!
Sudden death of a young person who was vaccinated against corona! Family request to find the cause!

கொரோனா தடுப்பூசி போட்ட இளவயது நபர் திடீர் மரணம்! காரணம் கண்டறிய குடும்பத்தார் கோரிக்கை!

கர்நாடக மாவட்டத்தில் அரிசிகேரே தாலுகாவில், தடுப்பூசி போட்டுக் கொண்ட வாலிபர் திடீரென மரணமடைந்துள்ளார். ஹாசன் மாவட்டம் அரிசிகேரே தாலுகாவை அடுத்த கிராமத்தில் வசிப்பவர் வசந்த்குமார். 35 வயதான இவர் கடந்த 4ஆம் தேதி அப்பகுதியில் நடந்த கொரோனா ஒருநாள் தடுப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த அவர் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறினார்.

உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு ஹாசன் மாவட்டத்தில், உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஹாசன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்ட காரணத்தால் தான் அவர் இறந்து விட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வசந்தகுமாரின் மரணம் பற்றி ஹாசன் மாவட்ட குடும்ப நலன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். ஹாசன் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கும் மேலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இதில் இவர் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் இறந்தார். என்பதை அரசால் ஏற்க முடியாது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவுகள் வந்த பிறகு அவர் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளார்.