ஒரு டீமுக்கு ஏன் இத்தனை பயிற்சியாளர்… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நியாயமான கேள்வி!

ஒரு டீமுக்கு ஏன் இத்தனை பயிற்சியாளர்… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் நியாயமான கேள்வி! டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-யை கடுமையாக வீழ்த்தினார். கடந்த வியாழன் அன்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 20 ஓவர்களில் 168/6 என்று இந்திய அணி கட்டுப்படுத்தப்பட்ட … Read more

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம் இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் … Read more

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்!

தோனிக்கு பிறகு அந்த சாதனையை செய்த கேப்டன் ஜோஸ் பட்லர்தான்… சுவாரஸ்ய தகவல்! இங்கிலாந்து அணிக்காக தான் தலைமையேற்ற முதல் டி 20 உலகக்கோப்பை தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்துள்ளார் ஜோஸ் பட்லர். அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இளம் வீரர்கள் அதிகமாகக் கொண்ட இங்கிலாந்து அணியை ஜோஸ் பட்லர் சிறப்பாக … Read more

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்!

உலகக் கோப்பையின் சிறந்த அணியை வெளியிட்ட ஐசிசி… இந்தியா சார்பாக மூன்று வீரர்கள்! நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய டி 20 உலகக்கோப்பை தொடர், நேற்றோடு நிறைவடைந்தது. நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணி கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு … Read more

உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

கணவனை ஜாமீனில் எடுக்க உதவி செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் பஹ்வாரா பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரின் கணவன் சில நாட்களுக்கு முன் குற்ற வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது கணவனை வெளியில் கொண்டு வருவதற்கு தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்நிலையில், அதே … Read more

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி!

பாபர் ஆசாம் பாகிஸ்தானுக்கே பிரதமர் ஆகலாம்… சுனில் கவாஸ்கர் கமெண்ட்ரி! 1992 உலகக் கோப்பைக்கும் 2022 டி20 உலகக் கோப்பைக்கும் இடையே பாகிஸ்தான் அணி ரசிகர்கள் செய்து வரும் ஒப்பீடுகளை பற்றி சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு 1992 உலகக் கோப்பையை தோல்வியுடன் தொடங்கியது, ஆனால் ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்து  அரையிறுதிக்கு தகுதி பெற்றது. பின்னர் அவர்கள் டேபிள்-டாப்பர் நியூசிலாந்தை தோற்கடித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 2022 டி20 உலகக் … Read more

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

இந்திய அணியிலேயே ரோஹித் ஷர்மாதான் ரொம்ப மோசம்… விளாசித் தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் குற்றம் சாட்ட்டியுள்ளார். இந்தியாவின் அரையிறுதி தோல்விக்குப் பிறகு பல முன்னாள் கிரிக்கெட்டர்கள், தங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சல்மான் பட் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ரோஹித் சர்மாவை … Read more

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்!

11 வருஷமா இந்தியன் டீம் ஒன்னுமே பண்ணல…. இங்கிலாந்து வீரர் சீண்டல்! ரோஹித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்தியாவை சீண்டும் விதமாக விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை “வரலாற்றில் மிகவும் குறைவான பர்பார்ம் செய்துள்ள வெள்ளை பந்து அணி” என்று கூறியுள்ளார். இந்த தோல்வி 2013 … Read more

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்!

ஆமாம்.,. இந்தியா டீம் சோக்கர்ஸ்தான்… கபில்தேவ் கடுமையான விமர்சனம்! விமர்சனங்கள் என்று வரும்போது கபில்தேவ், தயவு தாட்சண்யமின்றி கருத்துகளைக் கூறுபவர். கபிலின் வார்த்தைகள் கடந்த காலங்களில் அலைகளை உருவாக்கியுள்ளன, விராட் கோலி, சச்சின் என பலரையும் அவர் விமர்சித்துள்ளார். அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு இந்தியா தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது, இந்த தோல்வி கபில்தேவை, இந்திய அணியினரை ச்சோக்கர்ஸ் என்று சொல்லும் அளவுக்கு வழிவகுத்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஐசிசி போட்டிகளில் இந்தியாவின் … Read more

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து! இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தவிர வேறு எந்தவிதமான டி 20 லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை. வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பணமழைக் கொட்டும் டி 20 கிரிக்கெட் லீக் தொடராக  ஐபிஎல் உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் … Read more