பொதுமக்களுக்கு உஷார்!! பிற்பகல் ஒரு மணி வரை இந்த மாவட்டங்களில் கனமழை!!

Public alert!! Heavy rain in these districts till 1 o'clock in the afternoon!

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோர பகுதிகளை நெருங்க உள்ளது. இதனால் பிற்பகல் ஒரு மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள சூழ்நிலையில் அதற்கு பெங்கல் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு இது பெங்கல் புயலாக மாறியதும் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்க உள்ளது.

மேலும் இந்த புயலால் சென்னைக்கு அதிக பாதிப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த புயல் சென்னை புதுச்சேரி இடையே கரையை கடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புயலானது கரையை நெருங்கும் சமயத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்க கடலில் உருவான இந்த பெங்கல் புயல் கரையை கடக்கும் முன்னரே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலின் காரணமாக கடலூர் மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அதிக கனமழையும் சில இடங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்தின் சுமார் 15 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை விழுப்புரம் செங்கல்பட்டு கடலூர் மயிலாடுதுறை நாகை திருவாரூர் புதுக்கோட்டை சிவகங்கை தூத்துக்குடி ராமநாதபுரம் தென்காசி நெல்லை கன்னியாகுமரி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Read more

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! 

Now all liquor shops will be open till 11 pm!!

மதுப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி மதுபான கடைகள் அனைத்தும் 11 மணி வரை செயல்படும்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றதால் தேர்தல் நடத்த விதைகள் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு மேல் இயங்க கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து விட்டதால் மீண்டும் பழைய நேரத்திற்கே மதுபான கடைகள் இயங்க வேண்டும் என … Read more

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

Rain will continue for the next 7 days!! Weather Center Alert!!

அடுத்த 7 நாட்களுக்கும் தொடரும் மழை!! வானிலை மையம் எச்சரிக்கை!! இன்றிலிருந்து இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழைத் தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றினுடைய வேகமாக மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் இன்றிலிருந்து 7 நாட்களுக்கு மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த … Read more

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!

Carry an umbrella when you go!! Heavy rain warning again in Tamil Nadu!!

போகும்போது குடையுடன் போங்க!! மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!!  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் காற்றின் திசை வேகமாக மாறுபாடு காரணமாக பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து இன்னும் 4  நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…

காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்… காரைக்கால் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாரியம்மன் கோவில் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். கணேஷ் அவருடயை நண்பர்கள் சரவணன், வாசிப் முஷரப், அருண் ஆகிய மூன்று பேருடன் காரில் நேற்று(ஆகஸ்ட்12) மயிலாடுதுறைக்கு சென்றனர். பின்னர் மீண்டும் இன்று(ஆகஸ்ட்13) அதிகாலை … Read more

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

More heat will rise in Tamil!! Meteorological Department Announcement!!

தமிழத்தில் மேலும் வெப்பம் உயரும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டினால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த வாரம் புதன் கிழமை வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையான 38  டிகிரி முதல் 40  டிகிரியாக அதிகரிக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பத்தை … Read more

“இடி மின்னலுடன் கனமழை” தமிழ்நாட்டிற்கு உண்டு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

A low pressure area is crossing the coast!! Heavy rain warning!!

“இடி மின்னலுடன் கனமழை” தமிழ்நாட்டிற்கு உண்டு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தினமும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏராளமான இயற்கை சேதங்களும் ஏற்பட்டுள்ளது. எனவே, அப்பகுதயில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். நாடு முழுதும் மழை பெய்தாலும் தமிழகத்தில் சொல்லும்படியான அளவு மழை பெய்யவில்லை. ஆங்காங்கே மிதமான மழை மட்டுமே பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது வானிலை ஆய்வு … Read more

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of moderate rain in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது, மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!!  இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு … Read more