முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

முதல்வரின் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்! அதிர்ச்சியில் அதிமுக!

தான் ஒரு விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு விவசாயிகளுக்கு, எதிராக கொண்டு வந்திருக்கின்ற சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கேள்வி எழுப்பியிருக்கிறார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரு வசந்தகுமார் செய்து வைத்த நற்காரியங்களை வைத்து காங்கிரஸ் கட்சி … Read more

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் இடம் பகிரங்கமாக தனக்கு உதவி தேவை என்பதை எழுத்துவடிவில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நீர்பறவை, தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி அவ்வபோது … Read more

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக சுவரொட்டிகள் அடித்து விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் சில பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கின்றார். சினிமாவில் மட்டும் நடித்து வந்த ரஜினியை அரசியலில் குரல் கொடுக்க வைத்தது ஜெயலலிதா, அதுபோன்று திரைப்படங்களில் ஒரு சாக்லேட் ஹீரோவாக தெரிந்த நடிகர் விஜய் அவர்களை அரசியலுக்கு வழி மாற்றியது, திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர் மன்றத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்க திமுக … Read more

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை…! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக…!

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை...! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக...!

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அதிமுகவை தவிர எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சி சில சமயம் சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது அதேநேரம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 90% உடலில் நுரையீரல் பகுதி வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள காரணத்தினால் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி … Read more

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி

MK Stalin - Online Tamil News

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழக மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? என திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று திமுக தலைவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 … Read more

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

வேளாண் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 13ஆம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகளைக் கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம்,  … Read more

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.  அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் … Read more

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.   ஆனால் ஆளுநர் இதுவரை … Read more

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த சட்டப்பட்டதாரிகள் 63 நபர்கள் ஆகும். இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி, சிறப்புடன் நடத்திக் கொடுத்தவர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.  அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே அனைவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரிடம், ‘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் … Read more