#BREAKING உலகம் முழுவதும் முடங்கியது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…!

whatsapp

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியன முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் #whatsappdown #facebookdown ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் ட்விட்டரில் பதிவிட ஆரம்பித்துள்ளதால் இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெலிகிராம் சேவையும் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவும் முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் வாட்ஸ் அப், முகநூல், டெலிகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் … Read more

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்!

ஃபேஸ்புக்கில் மறந்தும் கூட இந்த 10 விஷயங்களை செய்து விடாதீர்கள்! நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருகி அனைத்தும் ஆன்லைன் மையமாக மாறி வருகின்றது. இப்பொழுது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது ஃபேஸ்புக் செயலி தான்.இதன் மூலம் நமக்குத் தெரிந்தவர் தெரியாதவர் என பல பேருடன் இணைந்து நமது தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அதில் ஆபத்தும் இருக்கின்றது.அப்படி பேஸ்புக்கில் உள்ள இந்த 10 விஷயங்களை கண்டிப்பாக செய்யவே கூடாது என்பதை பற்றி தான் பார்க்கப் … Read more

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் கருத்தை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம் – என்ன கருத்து தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.  ராணுவ மருத்துவமனையில் அவர் நான்கு நாட்கள் சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் வெள்ளை மாளிகையை வந்தடைந்தார். ஆனால் அப்போது அவருக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அதிபர் டிரம்ப்  அமெரிக்க மக்களுக்கு கொரோனா தொற்றை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். தற்போது தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் “கொரோனா தொற்று என்பது, பருவ காலங்களில் வரும் … Read more

அமெரிக்க பிரபலங்கள் கூறிய அதிர்ச்சி தகவல்கள்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதைத் தடைசெய்யும் மற்றோர் இயக்கத்தில், ஜூலை மாத நிலவரப்படி, 1,000 நிறுவனங்கள் சேர்ந்துள்ளன. சமூக ஊடகத் தளங்களில் பகைமை, பொய்த் தகவல் ஆகியவற்றுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிம் கார்டேஷியன், லியோனார்டோ டி காப்ரியோ, மைக்கல் ஜோர்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று தங்களுடைய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்  பக்கங்களில் எதையும் பதிவு செய்யப்போவதில்லை மற்றும் “Stop Hate for Profit” எனும் இயக்கத்தின் ஓர் அங்கமாக சமூக ஊடகங்களில் இன்று பதிவிடப் … Read more

பாதுகாப்பு கட்டமைப்பை குறித்த (TRAI) வெளியிட்ட புதிய அறிவிப்பு !!!

பேஸ்புக் ,வாட்ஸ் அப் மெசஞ்சர் ,கூகுள் ஹேர் ,ஸ்கைப் ,டெலிகிராம் உள்ளிட்ட ஓடிடி செயலிகளை இனி தொடர்ந்து கண்காணிக்க தேவையில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (TRAI) அறிவித்துள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் ,பேஸ்புக் மெசஞ்சர் உள்ளிட்ட ஓடிடி செயல்களை தொடர்ந்து கண்காணிக்க செயல்படுத்த வேண்டும் என இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும் ,இந்தியாவில் வட மாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் ஒரு கும்பல் தாக்கியதில் சிலர் கொல்லப்பட்டதை போன்ற பல்வேறு வதந்திகள் … Read more

பாஜகவிற்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்துகிறது? விளக்கமளிக்கும் ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தளத்தில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து அந்த நிறுவனம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று விளக்கமளிக்க உள்ளது.   சமீபகாலமாக சமூகவளைத்தளமான பேஸ்புக்கில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   அந்தவகையில், பாஜக கட்சிக்கு எதிரான கருத்துக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கி வருவதாகவும், இந்திய அரசியலில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும்,   அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜூர்னல் பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த … Read more

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு இன்ஸ்டாகிராமின் மூலம் அதிகரித்துள்ளது. டிக் டாக் செயலிக்கு எதிராக மற்றொரு செய்யலியை இன்ஸ்டாகிராமின் மூலம் இன்ஸ்டா ரீல்ஸை அறிமுகம் செய்தது பேஸ்புக் நிறுவனம். இதன் மூலம் வருவாய் ஆனது பல மடங்கு உயர்ந்துள்ளது. ரீல்ஸ் செயலின் அறிமுகத்தால் பேஸ்புக்கின் பங்கானது ஆறு சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் 13 சதவீத பங்குகள் மார்க் சக்கர்பெர்க் இடம் உள்ளது. இதனால் இவரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து, … Read more

ஊழியர்களுக்கு அனுமதி அளித்த பேஸ்புக் நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெறும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு நிலை அமலில் உள்ளது.  இதனால் பொருளாதார தேக்கநிலையும் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள்  அனைத்தும் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அந்த அறிக்கையில், சுகாதார மற்றும் அரசு நிபுணர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடி சூழலை பற்றி உள்மட்ட அளவில் … Read more

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube Facebook Twitter தடை! வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.அது என்னவெனில் உலகமே கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் வைரஸ் தொற்றால் ஏற்படும் பலிகளுக்கும் பயந்து நடுங்கி உள்ள நிலையில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் முதல் தொடங்கி கடவுள்கள் வரை அனைவரையும் அவமதித்து பிரச்சாரம் வெளியிடப்படுகின்றன. தனி நபர்கள் சிலரின் கட்டுரைகளும் பேச்சுக்களும் மத … Read more

கூகுள் ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்களால் பாதிப்பு:?அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை

அமேசான், கூகுள் ,ஆப்பிள் பேஸ்புக் ஆகிய நிறுவனக்களை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை செய்தது.காணொலி வாயிலாக நடைபெற்ற விசாரணையில், இந்நிறுவனங்கள் மட்டுமே 90 சதவீத இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் பெரு நிறுவனங்களான அமேசான், ஃபேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை முடக்கி, மக்களிடையே தேர்வு செய்யும் உரிமையை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இதனால் சிறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.இதுபோன்ற கேள்விகளை நாடாளுமன்ற குழுவினர் சரமாரியாக சுமத்தினர் . ஆனால் அமேசான் கூகுள் … Read more