புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

What happened due to the storm!! 13 people tragically lost their lives!!

புயலால் நேர்ந்த சம்பவம்!! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! பிரேசில் நாட்டில் உள்ள ஷியோகிராண்ட டொசூல் என்ற மாநிலத்தில் புயலின் காரணமாக கடும் சூறாவளி காற்று வீசி மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் வீட்டுக்குள் மழை நீர் புகுவதால் அவர்கள் வெளியில் … Read more

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!! 

The roof suddenly flew off in the wind! Passengers ran away screaming in fear!!

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!!  ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை,  இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு … Read more

சூறாவளியால் சுழன்ற மக்களின் வாழ்க்கை – சுக்குநூறாக உடைந்த வீடுகள்

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளி காற்றால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வீடுகள் அனைத்தும் சிதைந்துள்ளன. அங்கு அதிகமாக பனிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர மக்களுக்கு இதில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. கடலோர மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கேள்விக்குறியாகியுள்ளது? இந்த சூறாவளி பாதிப்பினால் மேலும் 10 பேர் மிகுந்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக அவசர உதவி மையங்கள் அனைத்தும் விரைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசு கடலோர மக்கள் … Read more

அமெரிக்காவில் வீசிவரும் லோரோ  சூறாவளி நிலவரம்?

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலத்தில் தற்போது வீசிவரும் லோரோ  சூறாவளியால் 4 பேர் இறந்தனர். வீடுகள் மீது மரங்கள் விழுந்ததால் அவர்கள் மாண்டதாக மாநில ஆளுநர் ஜான் பெல் எட்வார்ட்ஸ்  தெரிவித்தார். நேற்று கரையைக் கடந்த லோரோ  சூறாவளியால் பலத்தக் காற்றும், பல மணி நேர கனத்த மழையும் பெய்தது. தற்போது சூறாவளியின் வேகம் சற்று குறைந்துள்ளது. தேடல் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்தார். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடங்களை வழங்கும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.