ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் – அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த … Read more

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!

ஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடவுள்ளது. இன்று நடக்கும் போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாகும். இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஃபாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இரண்டு அணிகளிலும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! குஜராத்தை ஊதித்தள்ளிய மும்பை அணி!

ஐபிஎல் தொடரில் மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 45 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் 21 … Read more

இணையத்தை கலக்கி வரும் ஐபில் மீம்ஸ்…. பார்த்து ரசிக்க உள்ளே……..

பொதுவாக மற்ற கிரிக்கட் போட்டிகளை விட ஐபில் இந்தியாவில் கலை கட்டும். இதை ஐபில் திருவிழா என்றே கூறுவர். இந்தியன் பிரீமியர் லீக் 20 தொடர் போட்டிகளை கொண்ட கிரிக்கட் போட்டியாகும். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவமாக கொண்ட அணிகள் விளையாடுவார்கள். இந்த கிரிக்கட் தொடரானது 2008 ஆம் ஆண்டு BCCI ஆல் தொடங்கப்பட்டது. ஐசிசியின் எதிர்காலச் சுற்றுப்பயண திட்டத்தில் ஐபிஎல் பிரத்யேக விதிவிலக்கைப் பெற்றுள்ளது. இதனால் ஐபில் போட்டியின் போது வேறு எந்த பன்னாட்டு … Read more

ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 171 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்களை சேர்த்து இருந்தார். மும்பை அணியின் சார்பாக ராகுல் … Read more

வாழ்வா சாவா அனல் பறக்கும் இறுதிப்போட்டியில்! அந்த இரு அணிகள் நடக்கப்போவது என்ன!

60 போட்டிகளை கொண்ட ஐபிஎல் தொடரில் இன்றைய தினம் இறுதிப்போட்டி நடக்கின்றது. மோதும் அணிகள் டெல்லி கேப்பிடல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகியவை ஆகும். பிளே ஆப் சுற்றில் நடந்த அனல்பறக்கும் போட்டிகள் முடிந்து, இன்னும் சற்றே கூடுதலான எதிர்பார்ப்போடு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியாகி மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மிகப்பெரிய பலம். இந்த அணியை எதிர்த்து களமிறங்கும் டெல்லி அணி இந்த அணியும் சளைத்தது கிடையாது … Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு பும்ரா படைத்த! அந்த இமாலய சாதனையை பற்றி தெரியுமா!

ஐபிஎல்லில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை பின்னுக்குத் தள்ளி அபார சாதனை படைத்திருக்கிறார் பும்ரா. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் ஆன டிரென்ட் போல்ட் பும்ரா ஆகிய 2 பேரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதால், பந்துவீச்சில் மும்பை அணி மிரட்டி வருகின்றது. ஐபிஎல்லின் இந்த சீசனில் மலிங்கா இல்லாத குறை தெரியாமல் மும்பை அணி பந்துவீச்சில் மிக அபாரமாக இருக்கின்றது. நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றதோடு மட்டுமல்லாமல், நடப்பு சாம்பியனுமான மும்பை அணி முதல் … Read more

ஐபிஎல் : ரோகித் ஷர்மாவை எதிர்க்கும் விராட் கோலி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய … Read more

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வர விரும்பும் வீரரை வெளிப்படுத்தினார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் புகழ்பெற்ற கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்தார். மாஸ்டர் பிளாஸ்டர் கூட ரோஹித்தின் விருப்பத்திற்கு ஒரு கன்னமான பதிலைக் … Read more