அமெரிக்காவில் சரமாரியாக அதிகரிக்கும் போகும் கொரோனா

அமெரிக்காவில் சரமாரியாக அதிகரிக்கும் போகும் கொரோனா

மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களான கலிஃபோர்னியா, ஃபுளோரிடா, டெக்ஸஸ் ஆகியவற்றில் நோய்த்தொற்று குறையத் தொடங்கியுள்ளது. நீண்ட விடுமுறையான இவ்வார இறுதியில் மட்டும் அமெரிக்காவில் சராசரியாக நாள் ஒன்றுக்குப் புதிதாக 44,000 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவின் 22 மாநிலங்களில்கொரோனா நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த வாரம் நீண்ட விடுமுறை என்பதால் மக்கள் குடும்பங்களுடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது 22 மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது, … Read more

பிரான்ஸில் ஒரு வீட்டில் அரங்கேறிய வினோத சம்பவம்

பிரான்ஸில் ஒரு வீட்டில் அரங்கேறிய வினோத சம்பவம்

விளையாட்டு வினையாக மாறும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே அந்த பழமொழிக்கு ஏற்றபடி பிரான்ஸில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸில் ஒரு சிறிய ஊரில் ஓர் ஈயை அடிக்க முயன்ற ஒருவர், தம் வீட்டின் ஒரு பகுதியையே கொளுத்திவிட்டார். சுமார் 80 வயதுகொண்ட முதியவர் ஒருவர் உணவு உண்ணும் வேலையில் ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துள்ளது எரிச்சலடைந்த பெரியவர், பூச்சிகளைக் கொல்லும் மின்சார மட்டையால் அந்த ஈயை அடிக்க முயற்சி செய்தார். அந்த நேரம் பார்த்து … Read more

கொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல

கொரோனாவிற்கு எந்த நாடும் விதி விளக்கல்ல

உலக நாடுகள் அனைத்துக்கும் தற்போது மிகுந்த தலைவலியாக இருப்பது கொரோனா வைரஸ்தான். இந்த வைரசால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் மலேசியாவில் 9,459 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அங்கு 128 பேர் இறந்துள்ளனர். மலேசியாவில் சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் அந்நாட்டில் 62 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது. இதற்கு முன்னர் கடந்த … Read more

இங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

இங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹம் நகரில் கத்திக் குத்துச் சம்பந்தமான தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 27 வயது என்றும் அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்லி ஓக்  பகுதியில் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கத்திக் குத்துச் சம்பவங்கள் சுமார் இரண்டு மணிநேரத்தில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்ததாகப் புலனாய்வு அதிகாரி கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் … Read more

தனது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியை கூறிய பி.வி.சிந்து

தனது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியை கூறிய பி.வி.சிந்து

டென்மார்க்கில் அடுத்த மாதம்  நடைபெற இருக்கும் தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அவர்கள் தனது சொந்த பணியின் காரணமாக கலந்து கொள்ளமாட்டார் என அவருடைய தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர் ஆனால் தற்போது தங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த போட்டியில் விளையாட சிந்து சம்மதம் தெரிவித்து இருப்பதாக இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.    

நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம்

நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம்

இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் பயிற்சியாளருக்கான டிப்ளமோ படிப்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் இந்த ஆண்டு முதல் நுழைவு தேர்வை எழுதாமல் நேரடியாக சேரலாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயிற்சியாளர் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்க காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற துடுப்பு படகு வீரர் பஜ்ரங்லால் தாக்கர், ஆக்கி வீராங்கனை பூனம் ராணி உள்பட 33 … Read more

பென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு நேர்ந்தது என்ன?

பென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு நேர்ந்தது என்ன?

ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடருக்கு உலக அளவில் மிகப்பெரிய  ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய் சென்று விட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது தந்தையை கவனிக்க வசதியாக கடந்த மாதத்தில் நியூசிலாந்துக்கு … Read more

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்த வித முடிவும் எடுக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றன.  ஒருபக்கம் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் , அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி … Read more

இங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

இங்கிலாந்து நாட்டில் நிலநடுக்கமா?

பெட்போர்டுஷைர் என்ற நகரம் இடம் இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில்  பசார்டு என்ற இடத்தில் உள்ளது.   இந்த நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த  நிலநடுக்கம்  ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது. இந்நிலடுக்கத்தினால், அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் அதிர்ந்துள்ளன.  வீடுகளின் கதவுகள் ஆடியுள்ளன.  சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின.  5 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் … Read more

ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

ஒன்பது லட்சத்தை நெருங்கிய கொரோனா பலி

சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 … Read more