இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்!

Cheap vegetables in the ration shop anymore? The next roar of the OBS!

இனி ரேஷன்  கடையில் மலிவு விலை காய்கறிகளா? ஓபிஎஸ் யின் அடுத்த குமுறல்! பொதுமக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரும் ஆபத்துக்கள் தொடர்ந்த வண்ணமாக தான் உள்ளது. இந்த வகையில் முதலில் கரோனா என்ற தொற்று பாதிப்பு உருவானது. இது மக்களை விடாமல் துரத்தி வருகிறது. மக்களும் இதில் இருந்து மீண்டு வரும் பொழுதெல்லாம் கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக சென்னை ஆந்திரா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. … Read more

மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!

மழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முதலமைச்சர் நேரில் ஆய்வு!

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக, பாதிக்கப்பட்ட இருக்கின்ற பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் இரவு பகல் பாராமல் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பிடிசி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய அலுவலர்களுக்கு … Read more

இம்முறை ரூ.1000 இல்லை!வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! 

Not Rs.1000 this time! Only 20 items in one package! People questioning the government!

இம்முறை ரூ.1000 இல்லை! வெறும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பு மட்டுமே!  அரசிடம்  கேள்வி எழுப்பும் மக்கள்! தமிழர் திருநாளாக அனைவரும் கொண்டாடுவதுதான் தைத்திங்கள் பொங்கல். மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் அரசு வருடம் தோறும் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருவர்.அந்த வகையில் வருடந்தோறும் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி பருப்பு முந்திரி ஏலக்காய் ஆகியவற்றை வழங்குவர். அத்துடன் புடவை வேஷ்டி போன்றவையும் வழங்குவார்கள். மேலும் பரிசு தொகையாக ரூ 1000 வழங்கப்படும். … Read more

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு சென்னை மாநகராட்சி தகவல்!

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு சென்னை மாநகராட்சி தகவல்!

அம்மா உணவகங்கள் மூலமாக 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் சென்ற வாரம் பெய்த பலத்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் அம்மா உணவகங்களில் சென்ற பத்தாம் தேதி முதல் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்தாம் தேதி முதல் கடந்த 14ஆம் தேதி வரையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டது. நேற்று முதல் … Read more

நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்?.நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண்!

when-will-a-permanent-solution-be-available

கொறட்டூர் பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கிய ஸ்டாலினிடம் ‘எங்களுக்கு சோறு வேண்டாம்…நிரந்தர தீர்வு தான் வேண்டும்’ என கேட்ட பெண்ணால் சிறிது நேரம்அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கடந்த 2 நாட்களாக விடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. … Read more

கிராஃபிக்ஸ், எஃபெக்ட்ஸ் எல்லாம் மக்கள் பணிகளில் கொஞ்சம் கொறச்சிருக்கலாம் தலைவரே!

graphics-effects-can-all-be-a-little-lacking-in-peoples-work-leader

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்திருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் நேரில் சந்தித்து ஆய்வு … Read more

சாயமலைக்கா?கலிங்கப்பட்டிக்கா?. சுகாதாரத்துறை அமைச்சர் சந்திப்பு ரத்து.

saayamalikka-kalingapattikka-the-health-minister-cancel-the-meeting

திருநெல்வேலியில் புதியதாக மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையை அமைப்பதில் திமுக எம்எல்ஏவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே வெளியே தெரியாமல் மோதல் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் ஒன்றியம் சாயமலை கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றக் கோரி அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜா சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. … Read more

எதிர்பாராமல் வாழ்த்து பெற்ற திருமண தம்பதிகள்!

unexpectedly-greeted-wedding-couple

காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், புதியதாக திருமணமான தம்பதியினரை சாலையில் சந்தித்ததும் காரில் இருந்து இறங்கி திருமண வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். மேலும், இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வடசென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது … Read more

வேளாண் சட்டத்தை எதிர்ப்பது மு.க.ஸ்டாலின் குடும்பம் மட்டுமே! விமான நிலையத்தில் கூறிய அண்ணாமலை?

only-mk-stalins-family-opposes-agricultural-law-annamalai-at-the-airport

சென்னை வேளாண் சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராடவில்லை என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே அதனை எதிர்த்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது என்னவென்றால் :- தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிராக ஒரு விவசாயி கூட போராட்டம் நடத்தவில்லை. ஒரே ஒரு குடும்பம் தான், அதுவும் கோபாலபுரத்தில் உள்ள குடும்பம்தான் போராட்டம் நடத்தியது என கூறியுள்ளார். … Read more

சென்னையில் பரிதாபம்! உணவு, உடைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் மக்கள்?

awful-in-chennai-people-fighting-for-food-and-clothing

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த பொதுமக்கள், அடிப்படை தேவைகளுக்காக மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், வீடு மற்றும் உடமைகளை இழந்து, பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கனமழை … Read more